சர்ச்சையை கிளப்பிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி MLA

சர்ச்சையை கிளப்பிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி MLA

Share it if you like it

கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் சித்ர ரஞ்சன் தனியார் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் பேசிக்கொண்டிருந்த பொழுது. முகம் துடைக்க கர்ச்சீப்பை பயன்படுத்துவதற்கு பதில் முககவசத்தை எடுத்து முகத்தை துடைத்துள்ளார். தற்பொழுது நாட்டிலேயே அதிகமான கொரோனா நோயாளிகள் இருக்கும் மாநிலமாக கேரளா இருந்துவரும் சூழலில், அரசு பொறுப்பில் இருக்கும் ஒருவர் பொறுப்பில்லாமல் நடந்து கொண்டது கேரள மக்களிடையே அதிர்ப்தியை ஏற்படுத்தி உள்ளது.

கொரோனவை கட்டுப்படுத்துவதில் அமெரிக்காவே கம்யூனிச கியூபாவிடம் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் என கம்பு சுத்தியவர்கள் தமிழக கம்யூனிஸ்ட்கள், ஆனால் தடுப்பூசி கிடைக்காமல் அந்நாட்டு மக்கள் வீதியில் இறங்கி போராடும் காட்சிகளையும் நாம் பார்த்து வருகிறோம்.

தமிழக கம்யூனிஸ்ட்கள் கேரளா அரசை பார்..! பினராய் விஜயனை பார்..! கியூபா மாடலை பார்..! என்று மார்தட்டி கொண்டிருக்கும் சூழலில், இந்த காணொளி, அவர்கள் கட்டமைக்க நினைக்கும் கம்யூனிஸ்ட் மாடல் எனும் போலி பிம்பத்தை சுக்கு நூறாக்கி உள்ளது.


Share it if you like it