தமிழகத்தில் மதமாற்ற பிரச்னையே இல்லையாம்: உச்ச நீதிமன்றத்தில் தி.மு.க. வக்கீல் வில்சன் அண்டப்புளுகு!

தமிழகத்தில் மதமாற்ற பிரச்னையே இல்லையாம்: உச்ச நீதிமன்றத்தில் தி.மு.க. வக்கீல் வில்சன் அண்டப்புளுகு!

Share it if you like it

தமிழகத்தில் மதமாற்ற பிரச்னையே இல்லை. இந்த வழக்கு அரசியல் உள்நோக்கம் கொண்டது என்று தி.மு.க. வக்கீல் கூறிய நிலையில், கட்டாய மதமாற்றம் என்பது நாட்டின் மிகவும் தீவிரமான பிரச்னை. ஆகவே, இந்த விவகாரத்தில் அரசியல் சாயம் பூசக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் குட்டு வைத்திருக்கிறது.

இந்தியாவில் நடக்கும் மதமாற்றம் குறித்து டெல்லியைச் சேர்ந்த வழக்கறிஞர் அஸ்வினி குமார் உபாத்யாய, உச்ச நீதிமன்றத்தில் ஒரு பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், “அப்பாவி ஏழை மக்களை ஆசை காட்டியும், அச்சுறுத்தியும், பரிசுப் பொருட்கள் வழங்கியும், பணம் கொடுத்தும் மதமாற்றங்கள் நடக்கிறது. இதை தடுக்க வேண்டிய மத்திய, மாநில அரசுகள் எவ்வித நடவடிக்கையும் எடுப்பதில்லை. ஆகவே, இதற்கு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கோரிக்கை விடுத்திருந்தார். இந்த பொதுநல மனு, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எம்.ஆர்.ஷா, சி.டி.ரவிக்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணை நடந்து வருகிறது.

இந்த நிலையில், இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ”ஆசை காட்டியும், அச்சுறுத்தியும் மதமாற்றங்கள் நிகழ்கின்றன. இதுபோன்ற மதமாற்றங்களைத் தடுக்கவும், இதனை சரி செய்யவும் எத்தகைய நடவடிக்கைகள் தேவை என்பதில் நீதிமன்றத்திற்கு அட்டர்னி ஜெனரல் ஆர்.வெங்கடரமணியின் உதவி தேவை. இந்த வழக்கில் நீதிமன்றத்திற்கு உதவுபவராக நீங்கள் செயல்பட வேண்டும்” என்று நீதிபதிகள் தெரிவித்தனர். இதற்கு, தமிழக அரசு சார்பில் ஆஜரான தி.மு.க. வழக்கறிஞர் பி.வில்சன், “இந்த வழக்கு அரசியல் உள்நோக்கம் கொண்டது. எங்கள் மாநிலத்தில் இதுபோன்ற பிரச்னையே இல்லை” என்று வாய் கூசாமல் புளுகினார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், ”இதை எதிர்ப்பதற்கு உங்களுக்கு வேறு காரணங்கள் இருக்கலாம். ஆனால், நீதிமன்றத்தின் நடவடிக்கைளை திசை திருப்பாதீர்கள். நாங்கள் நாடு முழுக்க உள்ள பிரச்னைகளைக் கருத்தில் கொண்டு பேசுகிறோம். உங்கள் மாநிலத்தில் இந்த பிரச்னை இருந்தால் அது தவறு; இல்லாவிட்டால் நல்லது. இந்த பிரச்னையை ஒரு மாநிலத்தின் பிரச்னையாக பார்க்காதீர்கள். இதை அரசியலாக்காதீர்கள்” என்று சொல்லி தி.மு.க. வக்கீலின் மூக்கை உடைத்தனர். ஏற்கெனவே நடந்த விசாரணையின்போது, கட்டாய மதமாற்றம் மிகப் பெரிய பிரச்னை. இதுபோன்ற மதமாற்றங்கள் நாட்டின் பாதுகாப்புக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாகவும், மக்களின் மத சுதந்திரத்தை பாதிக்கக் கூடியதாகவும் இருக்கின்றன. ஆகவே, இதற்கு முற்றுப்புள்ளி வைக்கத் தேவையான நடவடிக்கைகளை, உண்மையான முனைப்போடு எடுக்க வேண்டும் என்று மத்திய அரசை கேட்டுக்கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it