சமூக வலைத்தளத்தில் டிரெண்டிங்கில் #ஊழல்_திமுக !

சமூக வலைத்தளத்தில் டிரெண்டிங்கில் #ஊழல்_திமுக !

Share it if you like it

வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில், தமிழக உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடிக்கும், அவரது மனைவி விசாலாட்சிக்கும் தலா 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.50 லட்சம் அபராதமும் விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னதாக, வருமானத்துக்கு அதிகமாக ரூ.1.72 கோடி அளவுக்கு சொத்து குவித்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில், தமிழக உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி ஆகிய இருவரும் குற்றவாளிகள் என்று தீர்ப்பளிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று தண்டனை விவரங்களை சென்னை உயர் நீதிமன்றம், அறிவித்துள்ளது. அதில் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி இருவருக்கும் 3 ஆண்டு சிறை தண்டனையோடு தலா 50 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. இந்நிலையில் #ஊழல்_திமுக என்கிற ஹாஷ்டாக் சமூக வலைத்தளங்களில் தற்போது டிரெண்டிங் ஆகி வருகிறது.


Share it if you like it