CPIM கட்சி எம்பி-யை ஒருமையில் பேசிய அமைச்சரை கண்டிக்காமல், தொடர்ந்து கள்ள மெளனம் காக்கும் தோழர் அருணன்..!

CPIM கட்சி எம்பி-யை ஒருமையில் பேசிய அமைச்சரை கண்டிக்காமல், தொடர்ந்து கள்ள மெளனம் காக்கும் தோழர் அருணன்..!

Share it if you like it

CPIM கட்சியை சேர்ந்த மதுரை எம்பி வெங்கடேசனை ஒருமையில் பேசிய அமைச்சர் கே.என்.நேரு.

தமிழகத்தில் நாளுக்கு நாள் சட்டம், ஒழுங்கு, மோசமாகி கொண்டே செல்லும் நிலையில், அது குறித்து எல்லாம் வாய் திறக்காமல். மத்திய அரசு, பாரதப் பிரதமர் மோடி, தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, என அனைவரையும் விமர்சனம் செய்வது, பா.ஜ.க ஆளும் மாநில முதல்வர்களுக்கு அறிவுரை வழங்குவது அல்லது சீன அரசிற்கு புகழ்பாடுவது என இன்று வரை டுவிட்டரில் வலம் வரும் நபராக அருணன் இருந்து வருகிறார் என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது.

இந்நிலையில் CPIM கட்சியின் மூத்த தலைவரும் மதுரை நாடாளுமன்ற உறுப்பினருமான வெங்கடேசன் அவர்களை, நகராட்சி நிர்வாகம், நகர்ப்புற மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என். நேரு அவர்கள் சமீபத்தில் ஒருமையில் பேசியது மக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. ஆனால் இன்று வரை கே.என்.நேருவின் பேச்சிற்கு கண்டனம் தெரிவிக்காமல் எங்கே? உண்டியல் குலுக்கி கொண்டு இருக்கிறார் தோழர் அருணன் என நெட்டிசன்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.

/

Share it if you like it