பாஜகவிற்காக எதிராக களம் இறங்கியுள்ள காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் ‘இந்தியா’ என்ற கூட்டணியை உருவாக்கி உள்ளன. ஆனால் தொடக்கத்திலேயே இந்த கூட்டணி சரிவை சந்தித்து வருகிறது. இந்த நிலையில் கூட்டணியில் இருந்து விலகுவதக சிபிஎம் பொலிட் பீரோ உறுப்பினர் பிரகாஷ் காரத் திடீரென அறிவித்துள்ளார். மேற்கு வங்க மாநிலத்தில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியை எதிர்த்து அரசியல் செய்யவேண்டிய சூழ்நிலை உள்ளதால், இந்தியா கூட்டணி தொடர்வது சாத்தியமில்லை என்றும் அவர் தெரிவித்திருந்தார. இது இந்தியா கூட்டணிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.