இந்து குழந்தைகளுக்கு முறுக்கு கொடுத்து மதமாற்றம் செய்யும் மிஷநரிகளின் காணொளி ஒன்று தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இந்தியாவிலேயே கேரளாவிற்கு அடுத்து தமிழகத்தில்தான் மதமாற்றம் செய்யப்படுகிறது என்று சொல்லப்படுகிறது. அதனை மெய்ப்பிக்கும் வகையில் பல்வேறு சம்பவங்கள் விடியல் ஆட்சியில் நடைபெற்று வருகிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான், இந்து சிறுவர்களை குறி வைத்து கிறிஸ்தவ மிஷநரிகள் தங்களது மதமாற்ற செயலை அரங்கேற்றி இருக்கின்றனர்.
மிஷநரிகளின் இந்த அடாவடி தனத்தை கண்டித்து பெண்மணி ஒருவர் பேசுவது போன்ற காணொளி ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த காணொளி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட ஏதேனும் ஒரு மாவட்டத்தில் எடுக்கப்பட்டு இருக்கும் என தெரிய வருகிறது.