கிறிஸ்துமஸ் பண்டிகையை வைத்து மதமாற்றம் செய்வது எப்படி?

கிறிஸ்துமஸ் பண்டிகையை வைத்து மதமாற்றம் செய்வது எப்படி?

Share it if you like it

கிறிஸ்துமஸ் பண்டிகையை வைத்து அப்பாவி மக்களை மூளை சலவை செய்வது எப்படி? என்று கிறிஸ்தவ மதபோதகர் ஆலோசனை வழங்கிய காணொளி ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.

’ஜெபிக்கலாம் வாங்க’ எனும் கிறிஸ்துவ நிகழ்ச்சியில், இளம் பெண் ஒருவர் இவ்வாறு பேசினார் ;

எல்லோருக்கும், ஒரு ஆலோசனை சொல்ல விரும்புகிறேன். ஆண்டவரை மற்றவர்கள் ஏற்றுகொள்ள செய்யும் போது ( மதமாற்றம் ) எனக்கு தயக்கமாக இருக்கிறது என்று நினைப்பவர்கள் இதனை செய்யுங்கள். கிறிஸ்துமஸ் பண்டிகை, நெருங்கி கொண்டு இருக்கிறது. தெருவோரம், வசிப்பவர்கள் இரவு பத்து மணிக்கு தங்களது இருப்பிடத்திற்கு திரும்பி வருவார்கள்.

அவர்களுக்கு, நன்மை செய்வது போன்று சாப்பிடுவதற்கோ, போர்வையோ வாங்கி கொடுங்கள். ஏசு உங்களை நேசிக்கிறார் என்று சொல்லுங்க. அது, ஒரு நல்ல ஊழியம். கிறிஸ்துமஸ் பண்டிகையை வைத்து, இதனை நாம் செய்யும் போது நமக்கு ஒரு உற்சாகம் பிறக்கும். அதன்பிறகு, நமக்கு ரொம்ப சுலபமாக இருக்கும். மெரினா பீச் மற்றும் தீவுதிடல் உள்ளிட்ட இடங்களில் தெருவோரம் வசிக்கும் மக்களை நாம் பார்க்க முடியும். கிறிஸ்துமஸ் பண்டிகையை வைத்து இதனை செய்யுங்கள் என அவர் பேசியிருக்கிறார்.


Share it if you like it