கடலூர் மாவட்டம் திருப்பாதிரிபுலியூரை சேர்ந்தவர் சிவகுமார். இவர், அப்பகுதியில் ஸ்டுடியோ கடை நடத்தி வந்தார். அவருக்கு ஆர்த்திகா என்ற பத்தாம் வகுப்பு படிக்கும் மகள் உள்ளார். இந்நிலையில், நேற்றைய தினம் சிவகுமாருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு அகால மரணம் அடைந்தார். இந்நிலையில், ஆர்த்திகாவிற்கு நேற்றைய தினம் பத்தாம் வகுப்பு கணித தேர்வு இருந்தது. இதையடுத்து, தனது தந்தையிடம் ஆசி வாங்கி கொண்டு அவர் தேர்வு எழுத சென்ற சம்பவம் கல்நெஞ்சையும் கரைய வைப்பதாக இருந்தது. இதுகுறித்த, செய்தியினை பிரபல ஊடகமான பாலிமர் வெளியிட்டு உள்ளது.
அதன் லிங்க் இதோ.