டெல்லியில் 16 வயது ஹிந்து சிறுமிக்கு 20 முறை கத்திக்குத்து: கொடூர கொலை… ஷாஹில் கைது!

டெல்லியில் 16 வயது ஹிந்து சிறுமிக்கு 20 முறை கத்திக்குத்து: கொடூர கொலை… ஷாஹில் கைது!

Share it if you like it

தலைநகர் டெல்லியில் ஷ்ரத்தா கொலை பரபரப்பு அடங்குவதற்குள், மற்றொரு சம்பவம் அரங்கேறி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. 16 வயது ஹிந்து சிறுமியை 20 முறை கத்தியால் குத்தியதோடு, கல்லைத் தூக்கி தலையில் போட்டு கொடூரமாகக் கொலை செய்த ஷாஹில் என்பவனை போலீஸார் கைது செய்தனர். இதுதொடர்பான சி.சி.டி.வி. காட்சிகள் வெளியாகி காண்போர் மனதை பதைபதைக்க வைத்திருக்கிறது.

டெல்லி ஷஹபாத் டெய்ரி பகுதியிலுள்ள ஜே.ஜே.காலனியைச் சேர்ந்தவர் 16 வயது சிறுமி. ஹிந்து மதத்தைச் சேர்ந்த இச்சிறுமியை லவ்ஜிகாத் என்னும் காதலை வலையில் வீழ்த்தி இருக்கிறான் ஷாஹில் என்பவன். இருவரும் பழக்கி வந்த நிலையில், ஒரு கட்டத்தில் ஷாஹிலின் சுயரூபம் சிறுமிக்கு தெரியவந்திருக்கிறது. எனவே, ஷாஹிலிடம் பேசுவதையும், பழகுவதையும் தவிர்த்து வந்திருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த ஷாஹில், நேற்று முன்தினம் சிறுமியை வழிமறித்து சமாதானம் செய்ய முயன்றிருக்கிறான். ஆனால், சிறுமி பிடிவாதமாக மறுக்கவே, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. பின்னர் அச்சிறுமி அங்கிருந்து சென்று விட்டார்.

இந்த நிலையில், அச்சிறுமிக்கு தெரிந்தவரின் குழந்தைக்கு நேற்று பிறந்தநாள் விழா கொண்டாடினார்கள். இதில் கலந்துகொள்வதற்காக அச்சிறுமி புறப்பட்டு வந்திருக்கிறார். அப்போது, சிறுமியை பின்தொடர்ந்து வந்த ஷாஹில், வழிமறித்து பிரச்னை செய்திருக்கிறான். பின்னர், தான் தயாராகக் கொண்டு வந்திருந்த கத்தியை எடுத்து சிறுமியை சரமாரியாக் குத்தி இருக்கிறான். 20 முறை கத்தியால் கண்மூடித்தனமாகக் குத்தியதில், அச்சிறுமி அலறியபடி கீழே சரிந்து விழுந்திருக்கிறார். பிறகு, அங்கு கிடந்த பெரிய பாறாங்கல்லை எடுத்து அச்சிறுமியின் தலையில் போட்டு கொடூரமாக கொலை செய்து விட்டு, சாவகாசமாகத் தப்பிச் சென்றான்.

இச்சம்பவம் நடக்கும்போது அந்த வீதியில் ஏராளமானோர் போகிறார்கள், வருகிறார்கள். ஆனால், யாருமே அந்தக் கொடூரன் ஷாஹிலை தடுக்கவில்லை என்பதுதான் வேதனை. இதனிடையே, பொதுமக்கள் கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்த போலீஸார், சிறுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து ஷாஹிலை தேடி வந்தனர். இந்த சூழலில், இன்று உத்தரப் பிரதேச மாநிலம் புலந்த்ஷாஹரில் வைத்து ஷாஹிலை கைது செய்திருக்கிறார்கள். டெல்லியில் கொலை செய்துவிட்டு, உத்தரப் பிரதேசத்திற்குச் சென்று தலைமறைவாகி இருக்கிறான்.


Share it if you like it