சிறுமி பலாத்காரம், கொடூரகொலை: ரிஸ்வான் கைது!

சிறுமி பலாத்காரம், கொடூரகொலை: ரிஸ்வான் கைது!

Share it if you like it

டெல்லியில் 8 வயது சிறுமியைக் கடத்தி, பாலியல் பலாத்காரம் செய்து, பின்னர் கழுத்தை அறுத்து, முகத்தை சிதைத்து கொடூரமாக கொலை செய்த 36 வயது இறைச்சிக் கடைக்காரரை போலீஸார் நேற்று கைது செய்தனர்.

பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் பாட்ஷா என்கிற ரிஸ்வான். இவர், 20 ஆண்டுகளுக்கு முன்பு வேலை தேடி டெல்லிக்கு வந்திருக்கிறார். அங்கு, துர்க்மேன் கேட் பகுதியில் இறைச்சிக் கடையில் வேலை செய்து வருகிறார். போதைப் பொருட்களுக்கு அடிமையான ரிஸ்வான், அடிக்கடி யமுனா கதர் பகுதிக்கு கஞ்சா புகைக்கச் செல்வதாகக் கூறப்படுகிறது. அப்போது, தர்யாகஞ்ச் பகுதியில் குடியிருக்கும் திருமணமான ஒரு பெண்ணுடன் ரிஸ்வானுக்கு பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. அப்பெண்ணின் கணவர் கூலித்தொழிலாளி. இவர்களுக்கு 4 குழந்தைகள்.

இந்த சூழலில், ரிஸ்வான் யமுனா காதர் பகுதிக்கு கஞ்சா புகைக்கச் செல்லும்போதெல்லாம், அப்பெண்ணுடன் உல்லாசமாக இருந்து வந்திருக்கிறார். இதை, அப்பெண்ணின் 8 வயதுடைய மகள் ஒருநாள் பார்த்து விட்டாள். இந்த விஷயத்தை அச்சிறுமி தனது தந்தையிடம் சொல்லி விடுவாளோ என்று பயந்துபோன ரிஸ்வான், அச்சிறுமியை தீர்த்துக்கட்ட திட்டம் போட்டிருக்கிறார். இதையடுத்து, கடந்த 4-ம் தேதி நள்ளிரவு கூலித்தொழிலாளி வீட்டில் அனைவரும் தூங்கிக் கொண்டிருந்தபோது, நைசாக உள்ளே நுழைந்த ரிஸ்வான், அந்த 8 வயது சிறுமியை கடத்திச் சென்றிருக்கிறார்.

பின்னர், அருகிலுள்ள காட்டுப் பகுதிக்குள் அச்சிறுமியை தூக்கிச் சென்று பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார். இதன் பிறகு, அச்சிறுமியின் கழுத்தை அறுத்து கொடூரமாகக் கொலை செய்தவர், அடையாளம் தெரியக்கூடாது என்பதற்காக அச்சிறுமியின் முகத்தையும் சிதைத்திருக்கிறார். அதிகாலையில் எழுந்து பார்த்த கூலித்தொழிலாளி, ​​​​தனது மகள்களில் ஒருவரை காணாதது காண்டு திடுக்கிட்டு, போலீஸில் புகார் செய்தார். போலீஸாரும் வழக்குப் பதிவு செய்து சிறுமியைத் தேடி வந்தனர். ஆனால், 10 நாட்களுக்கும் மேலாக சிறுமியை கண்டுபிடிக்க முடியவில்லை.

இந்த நிலையில், காணாமல் போன சிறுமியின் உடல், யமுனா காதர் பகுதியில் முகம் சிதைந்த நிலையில் கிடப்பதாக கடந்த ஆகஸ்ட் 18-ம் தேதியன்று போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, சிறுமியின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதில், சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, குற்றவாளியை பிடிக்க 50 பேர் கொண்ட போலீஸ் குழு அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்பகுதியிலுள்ள அனைத்து சி.சி.டி.வி. கேமரா பதிவுகளையும் சோதனை செய்தும் எந்த துப்பும் கிடைக்கவில்லை.

இதையடுத்து, யமுனா காதர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் சுமார் 200 பேரிடம் போலீஸார் விசாரித்தனர். அப்போதுதான், இறைச்சிக் கடைக்காரரான பாட்ஷா என்கிற ரிஸ்வான், அடிக்கடி யமுனா காதர் பகுதிக்கு வருவதும், சம்பவத்தன்றும் ரிஸ்வான் வந்திருப்பதும் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, ரிஸ்வானை பிடித்து விசாரித்தபோது, சிறுமியை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். பின்னர், ரிஸ்வானை கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறார்கள் போலீஸார். 8 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கழுத்தை அறுத்து, முகம் சிதைக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கும் சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.


Share it if you like it