அய்யப்பன் சுவாமி குறித்து அவதூறு: கடவுள் மறுப்பு அமைப்புத் தலைவரை நையப்புடைத்த ஹிந்துக்கள்!

அய்யப்பன் சுவாமி குறித்து அவதூறு: கடவுள் மறுப்பு அமைப்புத் தலைவரை நையப்புடைத்த ஹிந்துக்கள்!

Share it if you like it

விஷ்ணு, சிவன் மற்றும் அய்யப்பன் சுவாமி குறித்து இழிவாகப் பேசிய கடவுள் மறுப்பு அமைப்பின் தலைவரை ஹிந்துக்களும், அய்யப்ப பக்தர்களும் நையப்புடைத்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்தவன் பைரி நரேஷ். பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த இவன், தமிழகத்தில் செயல்பட்டு வரும் திராவிடர் கழகத்தைப் போல, தெலங்கானாவில் பாரதிய நாஸ்திக சமாஜம் என்கிற பெயரில் கடவுள் மறுப்பு இயக்கத்தை நடத்தி வருகிறான். கடந்தாண்டு டிசம்பர் 19-ம் தேதி தெலங்கானா மாநிலம் கோடங்கல் தொகுதிக்குட்பட்ட பகுதியில் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய பைரி நரேஷ், விஷ்ணு, சிவன் மற்றும் அய்யப்பன் சுவாமிகள் பற்றி மிகவும் இழிவாகப் பேசினான். இதனால் ஆத்திரமடைந்த பா.ஜ.க. உள்ளிட்ட ஹிந்துத்துவ அமைப்புகள், பைரி நரேஷ் மீது பல்வேறு போலீஸ் நிலையங்களில் புகார் கொடுத்தனர். ஆனால், போலீஸ் நடவடிக்கை எடுக்கவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த அய்யப்ப பக்தர்கள், பைரி நரேஷை கைது செய்யக்கோரி, ஐதராபாத் போலீஸ் ஸ்டேஷன் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனிடையே, பைரி நரேஷ் ஐதராபாத் கடைவீதியில் திரிவதைப் பார்த்த அய்யப்ப பக்தர்கள், அவனை நையப்புடைத்தனர். மேலும், தெலங்கானா மாநில பா.ஜ.க. தலைவர் பாண்டி சஞ்சய், முதல்வர் சந்திரசேகர ராவ் தன்னை ஒரு ஹிந்து என்று கூறிக் கொண்டாலும், ஹிந்து மதத்துக்கு விரோதமாகவே நடந்து வருகிறார். இதனால், ஹிந்து கடவுள்களை யார் வேண்டுமானாலும் விமர்சிக்கலாம் என்று நிலை நிலவுகிறது. இந்த விஷயத்தில் கே.சி.ஆர். நடவடிக்கை எடுக்காவிட்டால் மிகப்பெரிய போராட்டம் வெடிக்கும் என்று எச்சரிக்கை விடுத்தார்.

இதன் பிறகு, நிலைமை விபரீதமாவதை உணர்ந்த போலீஸார், பைரி நரேஷை கைது செய்து சிறையில் அடைத்தனர். சமீபத்தில்தான் சிறையில் இருந்து ஜாமீனில் வந்தான் பைரி நரேஷ். இந்த சூழலில், நேற்று மாலை ஹனம்கொண்டாவில் நடந்த கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய பைரி நரேஷ், மீண்டும் ஹிந்து கடவுள்கள் பற்றி இழிவாகப் பேசியிருக்கிறான். இந்த விவரம் ஹிந்து அமைப்புகளுக்குத் தெரியவரவே, மேற்கண்ட கல்லூரியில் திரண்டனர். இத்தகவல் பைரி நரேஷுக்குத் தெரியவரவே, போலீஸை தொடர்புகொண்டு பாதுகாப்புக் கேட்டிருக்கிறான். விரைந்து வந்த போலீஸார், அவனை பாதுகாப்பாக அழைத்து வந்து போலீஸ் வேனில் ஏற்றிக் கொண்டு புறப்பட்டனர்.

ஆனால், ஹிந்து அமைப்பினர் போலீஸ் வேனை வழிமறித்து நிறுத்தினர். பின்னர், பைரி நரேஷை கீழே இறக்கி விடுமாறு போலீஸாரிடம் கூறினார். ஆனால், போலீஸார் இறக்கி விடமறுத்ததால் ஆத்திரமடைந்த அய்யப்ப பக்தர்களும், ஹிந்து அமைப்பினரும் போலீஸ் வேனுக்குள் புகுந்து பைரி நரேஷுக்கு தர்மஅடி கொடுத்தனர். போலீஸார் தடுத்தும், அவனை வெளியே இழுத்துப் போட்டு நையப்புடைத்தனர். இதன் பிறகு, போலீஸார் ஒரு வழியாக அவர்களிடமிருந்து பைரி நரேஷை மீட்டு, போலீஸ் வேனில் அழைத்துச் சென்றனர். இச்சம்பவம் தெலங்கானா மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த தமிழக ஹிந்துக்கள் பலரும், ஓசிச் சோறு வீரமணி ஜாக்கிரதை என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணிக்கு எச்சரிக்கை விடுக்கும் பின்னூட்டமிட்டு வருகின்றனர்.

https://twitter.com/News18TamilNadu/status/1630522748941512704

Share it if you like it