வடமாநிலத்தில் சிவன், பார்வதி குடும்ப கட்டுப்பாடு பண்ணிக்கிட்டாங்களா? தி.மு.க. எம்.பி. திமிர் பேச்சு!

வடமாநிலத்தில் சிவன், பார்வதி குடும்ப கட்டுப்பாடு பண்ணிக்கிட்டாங்களா? தி.மு.க. எம்.பி. திமிர் பேச்சு!

Share it if you like it

சிவனும், பார்வதியும் வடநாட்டில் மட்டும் குடும்ப கட்டுப்பாடு பண்ணிக்கிட்டாங்களோ என்று தி.மு.க. எம்.பி. செந்தில்குமார் பேசியிருக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி ஹிந்துக்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

தர்மபுரி தொகுதியின் எம்.பி.யாக இருப்பவர் தி.மு.க.வைச் சேர்ந்த செந்தில்குமார். இவரது தந்தை செல்வராஜ் ஹிந்துவாக இருந்தாலும், தாய் ஷீலா கிறிஸ்தவர். அதேபோல, இவரது மனைவி ஷோபனாவும் கிறிஸ்தவர்தான். தவிர, செந்தில்குமாரும் ஒரு கிறிப்டோ என்று கூறப்படுகிறது. இதனால், ஹிந்து முறைப்படியான சடங்குகளுக்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகிறார். குறிப்பாக, இவரது தொகுதியில் நடக்கும் எந்தவொரு அரசு நிகழ்ச்சியில் கலந்துகொண்டாலும், அங்கு நடக்கும் பூமிபூஜை உள்ளிட்ட ஹிந்து மத சடங்களுக்கு எதிராகவும், விரோதமாகவும் செயல்பட்டு வருகிறார்.

இந்த நிலையில்தான், ஹிந்து தெய்வங்களை இழிவுபடுத்தி பேட்டியளித்திருப்பது ஹிந்துக்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஒரு தனியார் செய்தி நிறுவனத்தின் யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்த செந்தில்குமார், தமிழகத்தில் சிவன், பார்வதிக்கு விநாயகர், முருகன் என இரு மகன்கள் இருப்பதாக சொல்லி, இருவரையும் கடவுளாக வணங்குகிறார்கள். ஆனால், வடநாட்டில் சிவன் மற்றும் பார்வதிக்கு விநாயகர் மட்டுமே மகனாக கருதப்படுகிறது. அப்படியானால், வடமாநிலத்தில் சிவனும், பார்வதியும் குடும்பக் கட்டுப்பாடு பண்ணிக் கொண்டார்களா என்று கேள்வி எழுப்பி இருக்கிறார்.

தி.மு.க. எம்.பி. செந்தில்குமாரின் இந்த பேட்டிதான், ஹிந்துக்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. கடவுள் மறுப்பு, ஹிந்து மத வெறுப்பு மற்றும் கிறிப்டோ கிறிஸ்தவரான செந்தில்குமாருக்கு ஹிந்து மதத்தைப் பற்றியும், ஹிந்து கடவுள்களை பற்றியும் பேச என்ன அருகதை இருக்கிறது என்று கேள்வி எழுப்பி இருக்கும் ஹிந்துக்களும், ஹிந்து அமைப்புகளும், செந்தில்குமார் பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கின்றனர்.


Share it if you like it