என்ன கொடுத்தாலும் சரி, பணம் கொடுத்தாகணும்… அதிகாரிகளிடம் ஓப்பனாக கமிஷன் கேட்ட அமைச்சர்!

என்ன கொடுத்தாலும் சரி, பணம் கொடுத்தாகணும்… அதிகாரிகளிடம் ஓப்பனாக கமிஷன் கேட்ட அமைச்சர்!

Share it if you like it

நீங்க என்ன கொடுத்தாலும் சரி, பணம் கொடுத்தாகணும் என்று அமைச்சர் கே.என்.நேரு, ஓப்பனாக அதிகாரிகளிடம் கமிஷன் கேட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

நகர்ப்புற உள்ளாட்சித் துறை அமைச்சராக இருப்பவர் கே.என்.நேரு. எம்.எல்.ஏ. புகழேந்தியை நமக்கு வாய்த்த அடிமைகள் மிகவும் நல்லவர்கள் என்று கூறியது, திருச்சி மாநகராட்சி கவுன்சிலரை பொதுவெளியில் தலையில் அடித்தது, உதயநிதி விழாவில் தொண்டரை கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளியது, சென்னை மேயர் பிரியாவை ஒருமையில் பேசியது என பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியவர். எல்லாவற்றுக்கும் மேலாக டி.எஸ்.பி. ஒருவரை பார்த்து நிரபராதியை குற்றவாளியாக்குவார், குற்றவாளியை நிரபராதியாக்குவார் என்று கூறியது பெரும் விவாதமாக மாறியது.

இந்த நிலையில், திண்டுக்கல்லில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில், 132 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டப் பணிகள் தொடக்க விழா நேற்று முன்தினம் நடந்தது. பூமி பூஜை முடிந்த நிலையில், திட்டத்தின் செயல் விளக்கம் குறித்து அமைச்சர்கள் நேரு, ஐ.பெரியசாமியிடம் அதிகாரிகள் விளக்கிக் கூறிக் கொண்டிருந்தனர். அப்போது குறுக்கிட்ட அமைச்சர் நேரு, என்ன கொடுத்தாலும் சரி, பணம் கொடுத்தாகணும் என்று சொல்லி சிரித்தார். அமைச்சரின் இந்த பேச்சுதான் கடும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. பொதுவெளியில் இப்படி ஓப்பனாக கமிஷன் கேட்கிறாரே என்று அதிகாரிகள் திகைத்து விட்டனர்.


Share it if you like it