பாலியல் தொழில்: தி.மு.க. நிர்வாகி கைது!

பாலியல் தொழில்: தி.மு.க. நிர்வாகி கைது!

Share it if you like it

திண்டுக்கல் அருகே பாலியல் தொழில் நடத்தி வந்த தி.மு.க. நிர்வாகி, முன்னாள் நிர்வாகி உட்பட 9 பேரை போலீஸார் கைது செய்திருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

திண்டுக்கல் அடுத்த செட்டிநாயக்கன்பட்டி பகுதியில் சிலர் பாலியல் தொழில் நடத்தி வருவதாக மாவட்ட எஸ்.பி.க்கு புகார்கள் வந்தன. இதையடுத்து, எஸ்.பி. உத்தரவின் பேரில் தனிப்படை போலீஸார் அப்பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன், திண்டுக்கல்லைச் சேர்ந்த சண்முகம், சாணார்பட்டியைச் சேர்ந்த சுரேஷ், மேட்டுப்பட்டியைச் சேர்ந்த மரியஸ்டாலின் பாண்டி மற்றும் பாலியல் தொழிலில் ஈடுபட்ட 3 பெண்கள் உள்ளிட்டோரை போலீஸார் பிடித்தனர். அதேசமயம், போலீஸார் வருவதைக் கண்ட 3 பேர் தப்பிச் சென்று விட்டனர்.

பின்னர், பிடிபட்டவர்களிடம் போலீஸார் நடத்திய விசாரணையில், தப்பித்துச் சென்றவர்கள் உண்டார்பட்டியைச் சேர்ந்த கார்த்திக், திண்டுக்கல்லைச் சேர்ந்த ஸ்டீபன் ராஜ், அருண் என்பது தெரியவந்தது. இவர்களில் அருண் என்பவர் திண்டுக்கல் மாநகராட்சி தி.மு.க. கவுன்சிலர் விஜயாவின் மருமகன் என்பதும், மாநகர தி.மு.க. மேற்கு பகுதி இளைஞரணி துணை அமைப்பாளராக பொறுப்பு வகித்து வருவதும் தெரியவந்தது. அதேபோல, ஸ்டீபன் ராஜ் மாநகர மேற்கு பகுதி முன்னாள் மாணவர் அணி துணை அமைப்பாளராக இருந்தவர். தொடர்ந்து நடத்திய தேடுதல் வேட்டையில் அருண் மற்றும் ஸ்டீபன் ராஜ் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். கார்த்திக்கை தேடி வருகின்றனர்.

கைது செய்யப்பட்ட 9 பேரில் ராமநாதபுரம் ராதாகிருஷ்ணன், திண்டுக்கல் சண்முகம், சாணார்பட்டி சுரேஷ், மேட்டுப்பட்டி மரியஸ்டாலின் பாண்டி ஆகியோர் பாலியல் தொழில் புரோக்கர்களாக செயல்பட்டு வந்திருக்கிறார்கள். தி.மு.க. நிர்வாகி அருண், முன்னாள் நிர்வாகி ஸ்டீபன் ராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்ட 3 பெண்களை வைத்து பாலியல் தொழிலை நடத்தி வந்திருக்கிறார்கள். இவர்களுக்கு கார்த்திக் உடந்தையாக இருந்ததாகக் கூறப்படுகிறது. தலைமறைவாக இருக்கும் கார்த்திக், அ,தி,மு,க,வைச் சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது.


Share it if you like it