தந்தையை தவிக்க விட்டாரா நடிகர் விஜய்?!

தந்தையை தவிக்க விட்டாரா நடிகர் விஜய்?!

Share it if you like it

எனது மகன் மாதத்துக்கு ஒரு முறை வந்து ஒரு அரை மணி நேரம் எங்களுடன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தால் அதுதான் எனக்கு மிகப்பெரிய சந்தோஷம் என்று நடிகர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் கூறியிருப்பது நெகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

இன்றைய காலக்கட்டத்தில் உச்ச நடிகர் ரஜினிக்கு இணையாக அதிக சம்பளம் நடிகராக வலம் வருகிறார் நடிகர் விஜய். இவரது கால நடிகர்கள் அஜித், சூர்யா ஆகியோர் இவரது சம்பளத்தில் பாதிதான் வாங்கி வருகிறார்கள். காரணம், அந்தளவுக்கு நடிகர் விஜய்யின் படங்கள் ஹிட்டாகி வருகிறது. அதேபோல, அவரது ரசிகர்கள் பட்டாளமும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஆனால், ஆரம்ப காலத்தில் நடிகர் விஜய் நடித்த படங்கள் அனைத்தும் படுதோல்வியை சந்தித்தவை என்பது குறிப்பிடத்தக்கது. இவை அனைத்துமே தனது மகன் நடிகராக வேண்டும் என்று ஆசைப்பட்ட ஒரே காரணத்துக்காக அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் தயாரித்து இயக்கிய படங்கள். இதனால், தனது சொந்த வீடுகளை விற்று பெரும் கடனாளியானவர் எஸ்.ஏ.சி. என்பது குறிப்பிடத்தக்கது.

எனினும், விடா முயற்சியோடு கடனை உடனை வாங்கி தனது மகனை ஒரு நல்ல நடிகனாக்கி விட வேண்டும் என்று போராடினார் எஸ்.ஏ.சி. இதன் காரணமாகவே, திரைத்துறையில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார் விஜய். இதன் பிறகு, நடிகர் விஜய் தனது தந்தையை மதிப்பதில்லை என்று பரவலான குற்றச்சாட்டுகள் இருந்து வருகின்றன. காரணம், விஜய் உச்ச நடிகர்களில் ஒருவராக வலம் வருவதுதான். இதை மெய்ப்பிக்கும் வகையில் சில சம்பவங்களும் அரங்கேறி இருக்கிறது. அதாவது, கடந்த 2 வருடங்களுக்கு முன்பு நடிகர் விஜய் பெயரில் ஒரு புதிய கட்சியை துவக்கினார் அவரது தந்தையும் இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர். ஆனால், தனக்கும் அந்தக் கட்சிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று தனது ரசிகர்களிடம் சொல்லி, தனது தந்தையை அசிங்கப்படுத்தி விட்டார் விஜய்.

இதனால், அப்செட்டான இயக்குனர் எஸ்.ஏ.சி. எனது மகன் விஜய்யை நடிகர் விஜய்யாக்க நான் எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பேன் என்று எனக்குத்தான் தெரியும் என்று கண்ணீர் விடாத குறையாக தெரிவித்தார். இப்படியாக அப்பாவுக்கும் மகனுக்குமான பனிப்போர் நடந்து வருகிறது. இருவரும் தனித் தனி வீட்டில்தான் வசித்து வருகிறார்கள். இந்த சூழலில்தான், ஒரு சேனலுக்கு பேட்டியளித்த இயக்குனர் எஸ்.ஏ.சி.யிடம் நிகழ்ச்சி தொகுப்பாளர் ‘ஒரு தந்தையான உங்களுக்கு தளபதி விஜய் இந்த விஷயத்தை நிறைவேற்ற வேண்டும் என்று எதை நினைக்கிறீர்கள்’ எனது கேட்கிறார். அதற்கு எஸ்.ஏ.சி., ‘எனது மகன் விஜய் மாதம் ஒருமுறையாவது எனது வீட்டுக்கு வரவேண்டும். என்னப்பா எப்படி இருக்கிறீர்கள். என்ன செய்கிறீர்கள்” என்று கேட்க வேண்டும். எனது தோளில் தட்ட வேண்டும். என்னம்மா எப்படி இருக்கிறீர்கள் என்று அவரது தாயாரிடம் கேட்க வேண்டும். அப்படியே ஒரு அரை மணிநேரம் அமர்ந்து எங்களுடன் பேசிக் கொண்டிருக்க வேண்டும். இதுவே எனக்கு பெரிய விஷயம்’ என்று உருக்கமாகப் பேசியிருக்கிறார். இந்த காணொளிதான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

தந்தையின் ஆசையை நிறைவேற்றுவாரா விஜய்!


Share it if you like it