உதவி கேட்ட மாற்றுத்திறனாளி: திமிராக பேசிய எம்.எல்.ஏ.!

உதவி கேட்ட மாற்றுத்திறனாளி: திமிராக பேசிய எம்.எல்.ஏ.!

Share it if you like it

அரசு உதவி கேட்ட மாற்றுத்திறனாளியிடம் கோவமாக பேசிய ம.தி.மு.க. எம்.எல்.ஏ.வின் ஆடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் மூத்த தலைவர்களில் ஒருவர் ரகுராமன். இவர், சாத்தூர் சட்டமன்ற உறுப்பினராக இருந்து வருகிறார். இவரிடம், அரசு உதவி கேட்டு மாற்றுத்திறனாளி திருமலைக்குமார் என்பவர் மனு வழங்கி இருக்கிறார். இதையடுத்து, சில நாட்கள் கழித்து, அம்மனுவின் மீது என்ன? நடவடிக்கை எடுக்கப்பட்டது என திருமலைக்குமார் எம்.எல்.ஏ.வை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு இருக்கிறார்.

அதற்கு, ரகுராமன் கூறியதாவது; நீங்கள், அவசரப்பட்டால் வேற ஆளை வைத்து பார்த்துக் கொள்ளுங்கள். நான், உங்கள் வேலைக்காரன் கிடையாது. என்னால், உதவி மட்டுமே செய்ய முடியும். அதிகாரிகள் எல்லாம் சொன்ன உடனே செய்ய மாட்டார்கள். அது, எல்லாம் இங்க நடக்காது. நீங்கள் வேற ஆளை பாருங்கள் உங்கள் ஆவணத்தை வெளியில் வைத்து விடுகிறேன். நீங்கள், எடுத்து செல்லுங்கள் என திமிராக பேசி இருக்கிறார். இதுகுறித்தான, செய்தியினை புதிய தலைமுறை வெளியிட்டு இருக்கிறது.


Share it if you like it