காங்கிரஸ் பிரச்சார நிகழ்வில் பணம் விநியோகமா ?

காங்கிரஸ் பிரச்சார நிகழ்வில் பணம் விநியோகமா ?

Share it if you like it

விருதுநகரில் காங்கிரஸ் வேட்பாளரான மாணிக்கம் தாகூருக்கான பிரசார நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு பணம் வழங்குவது போன்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

அந்த காணொளியில் பெண் ஒருவர் குறைவான பணம் கொடுத்ததாக காங்கிரஸ் கட்சினரை சரமாரியாக திட்டினார். இன்னும் அந்த காலம் மாதிரியே 50, 100 கொடுக்குறாங்க. ஜெயிச்சா 10 காரு வாங்கி வச்சிகிடுறாங்க..சொத்து வாங்கி வச்சிகிடுறாங்க” மக்களுக்கு காசு தரதுல கஞ்சத்தனம் காட்டுவதாகவும் அவர் புலம்பினார்.

சில நாட்களுக்கு முன், மானாமதுரை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளரும், தற்போதைய சிவகங்கை தொகுதி எம்.பி.யுமான கார்த்தி சிதம்பரம் பிரசார நிகழ்ச்சி நடத்தினார். கார்த்தி சிதம்பரம் வெளியேறியதைத் தொடர்ந்து, இடைக்காட்டூர் திமுக பஞ்சாயத்து தலைவர், கலந்துகொண்ட பெண்களுக்கு தலா ₹50 வீதம் விநியோகித்ததாக பரவலாகப் பேசப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *