தீபாவளி மறுநாளும் விடுமுறை வேண்டும் !

தீபாவளி மறுநாளும் விடுமுறை வேண்டும் !

Share it if you like it

தீபாவளி பண்டிகை ஞாயிற்றுக் கிழமை வருகிறது. மறுநாள் திங்கள் கிழமை வேலைநாள் என்பதால் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள், ஆசிரியர்கள், அலுவலர்கள், மற்றும் அரசு ஊழியர்கள், தனியார் ஊழியர்கள் வருத்தமடைந்துள்ளனர்.

சென்னை போன்ற வெளியூர்களுக்கு செல்ல வேண்டுமென்றால் தீபாவளி முடிவதற்கு முன்னாலே பைகளை தூக்கிக் கொண்டு பயணத்துக்கு தயாராக வேண்டும். வார இறுதி விடுமுறை போல தீபாவளி இந்த ஆண்டு முடிகிறதே என்ற வருத்தம் இருப்பதால் தமிழக அரசுக்கு பலதரப்பினரும் கோரிக்கை வைத்துவருகின்றனர்.

அந்த வகையில் பட்டதாரி ஆசிரியர்கள் சங்கத்தினர் தமிழக அரசுக்கு முக்கிய கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளனர். தீபாவளிக்கு மறுநாளான திங்கள் கிழமையை விடுமுறை தினமாக அறிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளனர். வெளியூர் செல்லும் பொது மக்கள், ஆசிரியர்கள், அலுவலர்கள் மாணவர்கள் நலன் கருதி தீபாவளிக்கு மறுநாளான திங்கள் கிழமை விடுமுறை அறிவிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு பட்டதாரி ஆசிரியர்கள் சங்க நிர்வாகிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Share it if you like it