திராவிட மாடலால் இந்தியாவை ஆள முடியாது – துரைமுருகன் கருத்து!

திராவிட மாடலால் இந்தியாவை ஆள முடியாது – துரைமுருகன் கருத்து!

Share it if you like it

திராவிட மாடல் ஆட்சியால் இந்தியாவை ஆள முடியாது என்ற ரீதியில் கலாட்டா யூ டியூப் சேனலுக்கு துரைமுருகன் அளித்த பேட்டி தற்போது வைரலாகி வருகிறது.

தி.மு.க. தலைவர் மற்றும் தமிழக முதல்வராக இருப்பவர் மு.க. ஸ்டாலின். இவர், தனது தலைமையின் கீழ் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைத்து நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க திட்டமிட்டு இருக்கிறார். அதன்படி, எதிர்க்கட்சி தலைவர்களை தொடர்ந்து சந்தித்து வருகிறார். தனது தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்றால் துணை பிரதமர் பதவி தனக்குதான் வழங்க வேண்டும் என மு.க.ஸ்டாலின் நிபந்தனை விதித்திருப்பதாக அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில், தி.மு.க. மூத்த தலைவர், பொதுச் செயலாளர் மற்றும் நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன், கலாட்டா இணையதள ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், திராவிட மாடல் ஆட்சியால் இந்தியாவை ஆள முடியாது என்ற ரீதியில் பேசியிருக்கிறார். இந்த காணொளிதான் தற்போது வைரலாகி வருகிறது.


Share it if you like it