ஜாதி பெயரை சொல்லி ஆசிரியை உமாவை தாக்கிய திமுக நிர்வாகி !

ஜாதி பெயரை சொல்லி ஆசிரியை உமாவை தாக்கிய திமுக நிர்வாகி !

Share it if you like it

சேலம் மாவட்டம் வீரபாண்டி ஒன்றியத்திற்குட்பட்ட இலகுவம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருபவர் உமா. பள்ளி ஆசிரியையான உமாவை அதே பகுதியை சேர்ந்த திமுக நிர்வாகியான தம்பிதுரை என்பவர் நேரடியாக பள்ளிக்கு சென்று, ஜாதி பெயரை சொல்லி மிக தரக்குறைவாக பேசி தாக்கியுள்ளார். இந்த நிகழ்வை வீடியோ எடுக்க முயன்ற சந்தோஷ் என்கிற ஆசிரியரையும் தாக்கியுள்ளார். அப்போது பள்ளி மாணவர்களின் பெற்றோர் தம்பிதுரையை தடுத்து வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர். இதனால் மன உளைச்சல் அடைந்த ஆசிரியை உமா மாணவர்களின் பெற்றோர்களுடன் சேர்ந்து இரும்பாலை காவல் நிலையத்தில் தம்பிதுரை மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புகார் அளித்துள்ளார். ஆனால் காவல்துறை அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் காவல் நிலையத்தின் முன்பு அமர்ந்துகொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் தொடர்பான காணொளி ஒன்று சமூக வலைத்தளத்தில் தற்போது வைரலாகி வருகிறது.

https://x.com/ThanthiTV/status/1742427619596050940?s=20


Share it if you like it