“சேகர் பாபு கிட்ட பேசுறியா” பெண் போலீசை ஆபாசமாக மிரட்டிய திமுக அக் ஷர் அலி

“சேகர் பாபு கிட்ட பேசுறியா” பெண் போலீசை ஆபாசமாக மிரட்டிய திமுக அக் ஷர் அலி

Share it if you like it

அரசு அறிவித்த ஊரடங்கை அமல்படுத்தும் பொருட்டு சென்னை ப்ரோட்வே பகுதியில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு வந்த அக் ஷர் அலி என்ற ஆட்டோ ஓட்டுநர் மாற்று திறனாளி என பொய் சொல்லி மருத்துவ காரணங்களுக்காக செல்வதாக காரணம் கூறி போலி ஈ – பாஸ் எடுத்துவந்தது தெரியவந்தது. இதனை அடுத்து முத்தியால் பேட்டை காவல் உதவி ஆய்வாளர் கிருத்திகா, அவர்மீது வழக்கு பதிந்து ஆட்டோவை பறிமுதல் செய்தார். இதனால் கோபமடைந்த அக் ஷர் அலி அல்லா மீது சத்தியமாக நீ நாசமா போய்டுவ..! பாரு நீ என்ன ஆகப்போற பாரு என்று சபித்ததோடு, அமைச்சர் சேகர் பாபு கிட்ட பேசுறியா இங்க கூட்டிட்டு வரவா..? பாக்கறியா என்றெல்லாம் மிரட்டி பெண்னென்றும் பாராமல் ஆபாசமாக திட்டியுள்ளார்.

தவறு செய்வது பின்னர் மதம், அரசியல், கட்சி என போலீசாரை மிரட்டுவது போன்ற நடவடிக்கைகள் கடந்த சில தினங்களாக அதிகரித்து வருவது. போலீசார் மற்றும் பொது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.


Share it if you like it