கன்னித்தன்மை சோதனை விவகாரம்:  தேசிய குழந்தைகள் ஆணையம்… விளக்கம் கேட்டு கடிதம்!

கன்னித்தன்மை சோதனை விவகாரம்: தேசிய குழந்தைகள் ஆணையம்… விளக்கம் கேட்டு கடிதம்!

Share it if you like it

சிறுமியர்களுக்கு கன்னித்தன்மை சோதனை செய்யப்பட்டது என ஆளுநர் ஆர்.என். ரவி புகார் தெரிவித்திருந்தார். இப்படிப்பட்ட சூழலில், தேசிய குழந்தைகள் ஆணையம் தமிழக அரசின் தலைமைச் செயலாளருக்கு கடிதம் அனுப்பி விளக்கம் கேட்டுள்ளது.  

தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி அண்மையில் ஆங்கில பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், அறநிலையத்துறையின் கீழ் இல்லாத தில்லை நடராஜர் கோயிலில் குழந்தை திருமணங்கள் நடைபெற்றதாக புகார் அளிக்கப்பட்டதாகவும் ஆனால் அது போன்று எதுவும் நடக்கவில்லை எனவும் கூறியிருந்தார். இதில், குழந்தை திருமணங்கள் தொடர்பாக சிறுமியர்களை அழைத்துச் சென்று வலுக்கட்டாயமாக கன்னித்தன்மை சோதனை செய்யப்பட்டது. இதுகுறித்து, முதலமைச்சருக்கு தாம் கடிதம் அனுப்பியுள்ளதாக கூறினார்.  

ஆளுநரின் இந்த கருத்தை அடுத்து தமிழக அரசின் தலைமைச் செயலாளருக்கு இச்சம்பவம் குறித்து விளக்கம் கேட்டு தேசிய குழந்தைகள் நல ஆணையம் கடிதம் அனுப்பியுள்ளது. மேலும், ஆளுநரின் புகார் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை 7 நாட்களுக்குள் அனுப்புமாறு தலைமைச் செயலாளருக்கு அந்த ஆணையம் அதிரடி உத்தரவினை பிறப்பித்துள்ளது.


Share it if you like it