திருந்செந்தூர் நகராட்சி 3வது வார்டை சேர்ந்த திமுக கவுன்சிலர் அந்தோணி ட்ரூமன் என்பவர் திமுக கட்சியை சார்ந்த மற்ற பகுதிகளில் உள்ள பெண் கவுன்சிலர்களை மிகவும் தரக்குறைவாக விமர்சித்து சமூக வலைத்தளமான வாட்சப்பில் ஆபாசமாக பேசி ஆடியோ வெளியிட்டு பாலியல் துன்புறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் மனஉளைச்சல் ஆகி விரக்தி அடைந்த அந்த திமுக பெண் கவுன்சிலர்கள் திருந்செந்தூர் நகராட்சி 3வது வார்டை சேர்ந்த திமுக கவுன்சிலர் அந்தோணி ட்ரூமன் என்பவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார் அளித்துள்ளனர். திமுக கட்சியில் உள்ள பெண்களுக்கே இந்த கதி என்றால் சாதாரண பாமர ஏழை பெண்களின் நிலை என்னாவது என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.