காஞ்சிபுரத்தில் உள்ள ஆந்திரசன் மேல்நிலை பள்ளியில் பயிலும் மாணவர்களில் இரு ஹிந்து மாணவர்கள். தங்களது கழுத்தில் ருத்ராச்சம் மற்றும் நெற்றியில் திருநீறு அணிந்து வந்ததற்காக அப்பள்ளியின் வகுப்பு ஆசிரியர் ஜாய்சன் என்பவர் மாணவர்களை மிக கடுமையாக தாக்கி கண்டித்தது மட்டுமில்லாமல் பொறுக்கி, ரவுடி, தான் இதையெல்லாம் அணிந்திருப்பான் என்று விமர்சனம் செய்து வகுப்பு மாணவர்களை கொண்டு ஹிந்து மாணவர்களின் தலையில் கொட்ட வைத்து தனது மிஷநரிதனத்தை மாணவர்களிடம் காட்டிய சம்பவம் தமிழகம் முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் பாதிகப்பட்ட மாணவர்களின் பெற்றோரிடம் பள்ளி ஆசிரியர்கள் சமாதான முயற்சியில் ஈடுபட்டுள்ள காணொளி ஒன்று தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.