மத்திய அரசின் மீன்வளம், கால்நடை வளர்ப்பு பால்வளம், தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் அமைச்சர் எல்.முருகன் பத்திரிக்கையாளர்களின் சந்திப்பின் பொழுது தமிழக அரசின் மீது சில விமர்சனங்களை முன்வைத்து உள்ளார்.
தமிழக பா.ஜ.க முன்னாள் தலைவரும் மத்திய அமைச்சருமான முருகன் அவர்கள், தமிழக அரசிற்கு மோடி தலைமையிலான மத்திய அரசு எவ்வளவு தொகை வழங்கியுள்ளது என்பது குறித்தும், இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்கள் குறித்தும் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் தெரிவித்து உள்ளார் இதனை தூர்தர்ஷன் தனது டுவிட்டர் இணையதள பக்கத்தில் வெளியிட்டு உள்ளது.