சட்டப்பேரவையில் எவ்ளோ நாளாக இருக்கீங்க என பிரதமர் கேட்டார்: துரைமுருகன் சொன்ன பதில்!

சட்டப்பேரவையில் எவ்ளோ நாளாக இருக்கீங்க என பிரதமர் கேட்டார்: துரைமுருகன் சொன்ன பதில்!

Share it if you like it

என்னை பார்த்து பாரதப் பிரதமர் மோடி வியந்தார் என தி.மு.க. அமைச்சர் துரைமுருகன் பெருமிதத்துடன் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தி.மு.க.வின் மூத்த தலைவர், பொதுச் செயலாளர் மற்றும் நீர்வளத்துறை அமைச்சராக இருப்பவர் துரைமுருகன். இவர், அறிஞர் அண்ணா காலத்தில் இருந்தே தி.மு.க.வில் இருப்பவர். நான், தி.மு.க.வில் சேரும் போது ஸ்டாலினுக்கு 10 வயது இருக்கும் என பல பொதுக்கூட்டங்களில் துரைமுருகன் சுட்டிக்காட்டி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படிப்பட்ட சூழலில், வேலூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அமைச்சர் துரைமுருகன் கலந்து கொண்டார். அப்போது, பிரதமரிடம் தாம் உரையாடியது குறித்து நினைவு கூர்ந்தார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது ; சட்டப்பேரவையில் எத்தனை காலமாக இருக்கிறீர்கள் என பிரதமர் மோடி என்னிடம் கேட்டார். நான் 54 ஆண்டுகள் என்று கூறினேன். என்னது? 54 வருடங்களா என ஆச்சரியப்பாட்டார்.

ஒரே தொகுதியில் 13 முறை தேர்தலில் நின்றுள்ளேன் என நான் கூறினேன். இந்தியாவிலேயே இந்த மாதிரி யாரும் இல்லை என கூறினார் என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பெருமையுடன் தெரிவித்தார்.

54 வருடமாக தி.மு.க.வில் இருக்கிறீர்கள் உங்களால் ஏன் முதல்வர் ஆக முடியவில்லை? என பிரதமர் கேட்டிருந்தால் மிக நன்றாக இருந்து இருக்கும் என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


Share it if you like it