உதயநிதியை போன்று ஒரு எம்.எல்.ஏ.வை இந்தியாவிலேயே பார்க்க முடியாது – தி.மு.க. எம்.பி. புகழாரம்!

உதயநிதியை போன்று ஒரு எம்.எல்.ஏ.வை இந்தியாவிலேயே பார்க்க முடியாது – தி.மு.க. எம்.பி. புகழாரம்!

Share it if you like it

இந்தியாவிலேயே மிகச் சிறந்த எம்.எல்.ஏ. உதயநிதி ஸ்டாலின்தான் என்று கே.டி. பிரதர்ஸ்களில் ஒருவரான தயாநிதி மாறன் வெகுவாக பாராட்டியுள்ளார்.

தி.மு.க. இளைஞரணி செயலாளர் மற்றும் திருவல்லிக்கேணி – சேப்பாக்க சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் உதயநிதி ஸ்டாலின். இவர், வெற்றி பெற்ற பிறகு சில நாட்கள் தனது தொகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இதனை, தி.மு.க மற்றும் அதன் துணை ஊடகங்கள் ஆஹா, ஓஹோ என்று புகழ்ந்து தள்ளின. இதையடுத்து, நாட்கள் செல்ல செல்ல உதயநிதி தனது தொகுதிக்கு செல்வதை வெகுவாக குறைத்து கொண்டார்.

இதனால், தொகுதி மக்களின் அடிப்படைவசதிகள் முழுமையாக நிறைவேற்றபடவில்லை. அந்த வகையில், சேப்பாக்க தொகுதியை சேர்ந்தவர்கள் தங்களது குறைகளை உதயநிதியிடம் எடுத்துக் கூற முடியாமல் இன்று வரை திணறி வருகின்றனர். அதனை மெய்ப்பிக்கும் வகையில், கீழ்கண்ட காணொளியை குறிப்பிட்டு சொல்லலாம்.

உண்மை இவ்வாறு இருக்க, சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் விளையாட்டு வீரர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி கடந்த (01. 12. 2022) நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், ஹிந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் மற்றும் முக்கிய நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர். இதையடுத்து, தி.மு.க. எம்.பி. இவ்வாறு பேசினார் ; பத்து ஆண்டுகளாக சிலர் இருந்தார்கள் அவர்கள் ஒன்றும் செய்யவில்லை. ஆனால், 8 மாதத்தில் சென்னையில் மழை பெய்தால் தண்ணீர் தேங்காத அளவிற்கு கொண்டு வந்தவர் தமிழக முதல்வர் ஸ்டாலின். இந்தியாவிலேயே, மிகச்சிறந்த சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின்தான் என்று வெகுவாக பாராட்டியுள்ளளார். எம்.பி.யின் கருத்திற்கு, வலுசேர்க்கும் விதமாக அமைச்சர் சேகர்பாபு தனது பங்கிற்கு சேப்பாக்க சேகுவேராவை வெகுவாக பாராட்டியுள்ளார்.


Share it if you like it