ரகசிய தகவல் கொடுத்த அப்பாவியை காட்டி கொடுத்த காவல்துறை: போட்டு தள்ளிய கஞ்சா வியாபாரி!

ரகசிய தகவல் கொடுத்த அப்பாவியை காட்டி கொடுத்த காவல்துறை: போட்டு தள்ளிய கஞ்சா வியாபாரி!

Share it if you like it

கஞ்சா விற்பனை நடைபெறுவது குறித்து ரகசிய தகவல் கொடுத்த அப்பாவியை காவல்துறையினர் காட்டி கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில், தி.மு.க. ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த, ஆட்சியில் சட்டம் ஒழுங்கு ஐ.சி.யூ.வில் அட்மிட் செய்யப்பட்டு இருப்பதாக சமூக ஆர்வலர்கள் கூறி வருகின்றனர். அதனை உறுதிப்படுத்தும் விதமாக, கொலை, கொள்ளை, திருட்டு, வழிப்பறி போன்ற சம்பவங்கள் தமிழகத்தில் தொடர்கதையாக இருந்து வருகிறது. சட்டம், ஒழுங்கு டி.ஜி.பி. சைலேந்திர பாபுவின் கட்டுப்பாட்டில் இல்லை என்று தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை விடியல் அரசை சாடியிருந்தார். அவர், கூறியது போன்றே சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கும் நிலையில் இருந்து வருகிறது. இதுதவிர, சமூக விரோதிகளுக்கு காவல்துறையினர் மறைமுகமாக உதவி செய்து வரும் சம்பவங்கள் தொடர்ந்த வண்ணம் உள்ளது.

இதனிடையே, திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையம் ராஜா நகரைச் சேர்ந்தவர் வெங்கடாசலபதி வயது 63. இவர், அப்பகுதியில் உள்ள ரேஷன் கடையில் (எடையாளராக) பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர், தாம் பணி புரிந்து வரும் ரேஷன் கடையில் அரிசி கடத்தல் தொடர்ந்து நடைபெற்று வருவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவலை கொடுத்து இருக்கிறார். இந்த தகவல், எப்படியோ? கடத்தல் கும்பலுக்கு தெரியவந்துள்ளது. இதனால், கோவமடைந்த அக்கும்பல் வெங்கடாசலபதியை அவரது வீட்டின் அருகே கொடூரமான முறையில் கொலை செய்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இதுகுறித்தான, செய்தியினை பிரபல எழுத்தாளர் மாரிதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார். ஆதாரம் இதோ.

இப்படிப்பட்ட சூழலில், மற்றொரு சம்பவம் அரங்கேறியுள்ளது இது குறித்து விவரிக்கிறது இந்த தொகுப்பு ;

சென்னை புளியந்தோப்பு ஏ.எம்.கார்டன் பகுதியை சேரந்தவர் முனுசாமி. இவர், பெரியமேடு அல்லிக்குளம் பஜாரில் பழைய இரும்பு கடை நடத்தி வருகிறார். இவரது, கடை எதிரே செல்போன் கடை நடத்தி வந்தவர் மணிகண்டன். இவர், தனது கடையில் கஞ்சா பொட்டலம் விற்று வருவதை முனிசாமி அறிந்துள்ளார். இதையடுத்து, காவல்துறைக்கு ரகசியமாக அவர் தகவல் கொடுத்துள்ளார். இதனை தொடர்ந்து, காவலர்கள் மணிகண்டனை அழைத்து கடுமையாக எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்துள்ளனர்.

தாம், கஞ்சா விற்பனை செய்வது காவலர்களுக்கு எப்படி? தெரியும் என்று அவன் விசாரித்துள்ளான். இரும்பு வியாபாரி தகவல் கொடுத்தது அவனுக்கு தெரியவந்துள்ளது. இதனால், ஆத்திரமடைந்த மணிகண்டன் தனது கூட்டாளிகளுடன் சென்று முனிசாமியை சரமாரியாக வெட்டி கொன்றுள்ளான். மேலும், நியூஸ் 18 லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


Share it if you like it