காவல் நாய்களே”… “எச்சைப் பிழைப்பு”… “எச்சைப் பிழைப்பு”… போலீஸ் நிலையம் முன்பு வி.சி.க. ஆர்ப்பாட்டம்!

காவல் நாய்களே”… “எச்சைப் பிழைப்பு”… “எச்சைப் பிழைப்பு”… போலீஸ் நிலையம் முன்பு வி.சி.க. ஆர்ப்பாட்டம்!

Share it if you like it

தமிழக காவல்துறையினரை ஆபாசமாக திட்டிய வி.சி.க.வினரின் செயல் பொதுமக்கள் மத்தியில் பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் இடம் தொடர்பான (கட்டப்பஞ்சாயத்து) பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, இந்த விவகாரம் ஆரணி காவல் நிலையத்தில் நடந்து வந்தது. அந்த வகையில், வி.சி.க.வின் மாவட்ட செயலாளர் மா.கு.பாஸ்கரன் என்பவர் காவல் நிலையத்திற்கு சென்று கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனை தொடர்ந்து, அங்கு பணியில் இருந்த எஸ்.ஐ. கிருஷ்ண மூர்த்தியை ஜாதியின் பெயரை சொல்லியும், அருவருக்கதக்க வகையில் ஒருமையில் திட்டியிருக்கிறார்.

காவல்நிலையத்தில் புகுந்து அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடை செய்தல் மற்றும் ஆபாசமாக திட்டியது தொடர்பாக மா.கு.பாஸ்கரன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார். இதையடுத்து, கடந்த வியாழக்கிழமை அன்று அவருக்கு ஜாமின் கிடைத்தது. இதனை தொடர்ந்து, மா.கு.பாஸ்கரன் தனது ஆதரவாளர்கள் புடை சூழ திறந்த காரில் ஊர்வலமாக சென்று இருக்கிறார். அப்போது, ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள் காவலர்களை ஒருமையிலும், ஆபாசமாக திட்டினர். இந்த காணொளிதான் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. காவல்துறையை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் முதல்வர் ஸ்டாலின் வி.சி.க. குண்டர்களின் இழிவான செயலை கண்டிப்பாரா? என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

மேலும், விவரங்களுக்கு அதன் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


Share it if you like it