ஆபாசமாக திட்டியது தி.மு.க. நிர்வாகியின்  உரிமையாம்… அந்தர் பல்டி அடித்த குடும்பம்!

ஆபாசமாக திட்டியது தி.மு.க. நிர்வாகியின் உரிமையாம்… அந்தர் பல்டி அடித்த குடும்பம்!

Share it if you like it

பட்டியல் சமூக இளைஞரை திட்டிய தி.மு.க. நிர்வாகிக்கு ஆதரவாக அவரது பெற்றோர்கள் பேசியிருப்பது பொதுமக்கள் மத்தியில் பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் திருமலைகிரியல் புகழ் பெற்ற பெரிய மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில், ஒரு குறிப்பிட்ட சாதியினருக்கு மட்டும் சொந்தமான கோவில் என்று சொல்லப்படுகிறது. ஆகவே, இக்கோவிலுக்கு வேறு எந்த ஜாதியினரும் செல்வதில்லை. அந்த வகையில், ஊர் கட்டுப்பாட்டை மீறி பட்டியல் சமூகத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் அக்கோவிலுக்கு சென்று இருக்கிறார். இதனை தொடர்ந்து, சேலம் தெற்கு தி.மு.க. ஒன்றிய செயலாளர் டி.மாணிக்கம் அந்த இளைஞரை ஊர் முன்னிலையில் வைத்து ஆபாசமான முறையில் திட்டினார். இந்த காணொளி, பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், கடும் கோவத்தையும் ஏற்படுத்தி இருந்தது.

பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் ஏதேனும் சிறு தவறு நடந்துவிட்டால் அலறி துடிக்கும் தமிழக போராளிகள் இன்றுவரை சேலம் சம்பவம் குறித்து பேசவில்லை என்பதே கசப்பான உண்மை. இப்படிப்பட்ட சூழலில், தி.மு.க. நிர்வாகியால் பாதிக்கப்பட்ட இளைஞருக்கு பலர் தங்களது ஆதரவினை சமூக வலைத்தளங்களில் தெரிவித்து வருகின்றனர். மேலும், தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் தி.மு.க.விற்கு தங்களது கடும் கண்டனத்தை தெரிவித்து இருந்தனர்.

இப்படிப்பட்ட சூழலில், தி.மு.க. நிர்வாகியால் பாதிக்கப்பட்ட இளைஞருக்கு ஆறுதல் கூற வேண்டிய இடத்தில் உள்ளனர் அவரது பெற்றோர்கள். ஆனால், ஒட்டு மொத்த குடும்பமும் தி.மு.க. நிர்வாகிக்கு ஆதரவாக பேசிய சம்பவம்தான் கொடுமையிலும் கொடுமை. இடையில் என்ன? நடந்தது என்பது இறைவனுக்கு மட்டுமே வெளிச்சம் என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த காணொளிதான் தற்போது வைரலாகி வருகிறது. மேலும், விவரங்களுக்கு அதன் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


Share it if you like it