முதல்வரை மீண்டும் சீண்டிய… தி.மு.க. எம்.எல்.ஏ.!

முதல்வரை மீண்டும் சீண்டிய… தி.மு.க. எம்.எல்.ஏ.!

Share it if you like it

தி.மு.க. கூட்டணியில் உள்ள வேல்முருகன் தமிழக முதல்வரை சீண்டும் வகையில் மீண்டும் கருத்து தெரிவித்து இருப்பது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக வாழ்வுரிமை கட்சியின் நிறுவனராக இருப்பவர் வேல்முருகன். இவர், தி.மு.க.வின் உதயசூரியன் சின்னத்தில் நின்று பண்ருட்டி சட்டமன்ற தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர். தி.மு.க.வின் கூட்டணியில் இருந்தாலும், விடியல் ஆட்சியில் நடக்கும் அவலங்களை விமர்சனம் செய்ய கூடியவர். இதன்காரணமாக, தி.மு.க.வை சேர்ந்த தலைவர்கள் இவர் மீது கடும் கோவத்தில் இருந்து வருகின்றனர் என்று சொல்லப்படுகிறது. அந்த வகையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஜூனியர் விகடனுக்கு அளித்த பேட்டியில் இவ்வாறு கூறியிருந்தார் ; தி.மு.க. அன்று சொன்னதை இன்று மாற்றிப் பேசுவது ஏற்புடையதல்ல. எட்டுவழிச் சாலைத் திட்டம், கோவை சூயஸ் குடிநீர் திட்டம், டாஸ்மாக் கடைகள், நீட் விலக்கு, இஸ்லாமியச் சிறைவாசிகள் விடுதலை எனப் பல வாக்குறுதிகளை தி.மு.க கொடுத்தது. முன்பு ஒன்று பேசிவிட்டு, தற்போது மாறுபட்ட கருத்தைச் சொல்வது ஏற்புடையதல்ல, கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை எனில் மக்கள் மத்தியில் எதிர்ப்பு உண்டாகும் என காட்டமான முறையில் கருத்து தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில், தி.மு.க. அரசை வேல்முருகன் சீண்டும் வகையில் தனது எண்ணத்தை இவ்வாறு வெளிப்படுத்தி இருக்கிறார் ; தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. இரட்டை நிலைப்பாடு தெரிகிறது என விடியல் அரசை மீண்டும் சீண்டி இருக்கிறார் தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it