அரசு கனிம வளங்கள் வெடி வைத்து தகர்ப்பு?: கழக கண்மணிகளின் அட்ராசிட்டி!

அரசு கனிம வளங்கள் வெடி வைத்து தகர்ப்பு?: கழக கண்மணிகளின் அட்ராசிட்டி!

Share it if you like it

திருப்பூர் மாவட்டத்தில் அரசு நிலத்தை தி.மு.க.வை சேர்ந்தவர்கள் அபகரித்துள்ளனர். இதுகுறித்து, பெண் சமூக ஆர்வலர் ஒருவர் காணொளியாக பதிவு செய்து வெளியிட்டு இருக்கும் காணொளி ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.

தமிழகத்தில், ஸ்டாலின் தலைமையில் விடியல் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த, ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சிரிப்பாய் சிரித்து வருகிறது. கொலை, கொள்ளை, வழிப்பறி மற்றும் கஞ்சா புழக்கம் தலைவிரித்து ஆடி வருகிறது. இதுஒருபுறம் இருக்க, கழக கண்மணிகள், தி.மு.க. எம்.எல்.ஏ. மற்றும் எம்.பி.க்களின் அட்டூழியங்கள், அடாவடிகள் தொடர்கதையாக இருந்து வருகிறது. இப்படிப்பட்ட சூழலில், திருப்பூர் மாவட்டத்தில் அரசு நிலத்தில் உள்ள கனிம வளங்களை தி.மு.க.வினர் வெடி வைத்து தகர்த்துள்ளனர். மேலும், அந்த இடத்தை ஆக்கிரமித்து வேலி அமைத்துள்ளனர்.

இதனை அப்பகுதியை சேர்ந்த பெண்மணி ஒருவர் காணொளியாக பதிவு செய்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். இந்த, காணொளிதான் தற்போது வைரலாகி வருகிறது. மேலும், விவரங்களுக்கு அதன் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


Share it if you like it