நிருபர் எழுப்பிய கேள்வி: இப்ப நா வந்து என்ன சொல்றது… திருதிருவென விழித்த உதயநிதி!

நிருபர் எழுப்பிய கேள்வி: இப்ப நா வந்து என்ன சொல்றது… திருதிருவென விழித்த உதயநிதி!

Share it if you like it

டெல்லியில் பாரதப் பிரதமர் மோடியை சந்தித்த பின்பு பத்திரிகையாளர்களை உதயநிதி ஸ்டாலின் சந்தித்தார். இதையடுத்து, நிருபர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்க முடியாமல் அவர் திருதிருவென விழித்தார்.

தி.மு.க. இளைஞரணி செயலாளர் மற்றும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுதுறை அமைச்சராக இருப்பவர் உதயநிதி ஸ்டாலின். இவர், டெல்லியில் நடைபெற்ற பஞ்சாப் ஆளுநர் வீட்டின் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இவருடன், கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் எம்.பி.க்கள் கலந்து கொண்டனர். இதனை தொடர்ந்து, பிப் – 28- ஆம் தேதி பாரதப் பிரதமர் மோடியை அமைச்சர் உதயநிதி சந்தித்தார்.

இதையடுத்து, பத்திரிகையாளர்களை அமைச்சர் உதயநிதி சந்தித்தார். அந்த வகையில், நிருபர்கள் பல்வேறு கேள்விகளை அவரிடம் முன்வைத்தனர். அதில், ஒரு நிருபர் தமிழகத்தில் பல்வேறு பிரச்சனைகள் தீர்க்கப்படாமல் உள்ளது. இந்த நிலையில், சென்னை மெரினா கடலில் பேனா வைக்க வேண்டுமா? அந்த பேனா சின்னத்தை அறிவாலயத்தில் ஏன் வைக்க கூடாது என்ற கேள்வியை முன்வைத்தார்.

நிருபரின் கிடுக்குபிடி கேள்வியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சற்றும் எதிர்பார்க்கவில்லை. இதனை தொடர்ந்து, நிருபரின் கேள்விக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் உதயநிதி மழுப்பலாக பதில் அளித்தார். இந்த, காணொளிதான் தற்போது வைரலாகி வருகிறது.


Share it if you like it