அத நீயே வச்சுக்க… இதை மட்டும் கொடு…உ.பி.க்கள் செய்த சம்பவம்!

அத நீயே வச்சுக்க… இதை மட்டும் கொடு…உ.பி.க்கள் செய்த சம்பவம்!

Share it if you like it

தமிழக முதல்வர் ஸ்டாலினின் பிறந்த நாளை முன்னிட்டு வழங்கப்பட்ட மரக்கன்றுகளை கழக கண்மணிகள் அறிவாலயத்திலேயே விட்டு சென்ற சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பலத்த சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளது.

தி.மு.க. தலைவர் மற்றும் தமிழக முதல்வராக இருப்பவர் ஸ்டாலின். இவர், மார்ச்-1 ( இன்று ) தனது 70-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அந்த வகையில், சென்னை அறிவாலயத்தில் முதல்வரின் பிறந்த நாள் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதையடுத்து, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், வி.சி.க. உள்ளிட்ட கட்சியின் தலைவர்கள் முதல்வரை சந்தித்து தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில், முதல்வர் ஸ்டாலின் தனது கட்சி தொண்டர்களை சந்தித்து வருகிறார். இந்த நிலையில், முதல்வருக்கு வாழ்த்து தெரிவிக்க வருபவர்களுக்கு மரக்கன்றும், பிரியாணியும் வழங்கப்பட்டன. இதில், பிரியாணியை மட்டும் சாப்பிட்டுவிட்டு பரிசாக கிடைத்த மரக்கன்றை அறிவாலய வாசலில் தி.மு.க. கழக கண்மணிகள் வீசி சென்று இருக்கின்றனர்.

இதனை, யாரோ ஒருவர் புகைப்படமாக எடுத்து சமூகவலைத்தளத்தில் பதிவிட்டு இருக்கிறார். இந்த, படம் தான் தற்போது வைரலாகி வருகிறது.


Share it if you like it