முதல்வர் பிறந்த நாள்: கடும் நெருக்கடியை சந்தித்த மக்கள்!

முதல்வர் பிறந்த நாள்: கடும் நெருக்கடியை சந்தித்த மக்கள்!

Share it if you like it

முதல்வர் ஸ்டாலினின் பிறந்த நாளில் கடும் நெருக்கடியை மக்கள் சந்தித்துள்ளனர்.

தி.மு.க. தலைவர் ஸ்டாலினின் 70-வது பிறந்த நாள் விழா நேற்றைய தினம் கொண்டாடப்பட்டது. அந்த வகையில், சென்னை அறிவாலயத்தில் முதல்வரின் பிறந்த நாள் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

இந்த நிலையில், முதல்வர் ஸ்டாலினுக்கு வாழ்த்தும் சொல்லும் வண்ணம் தி.மு.க.வை சேர்ந்த தொண்டர்கள் ஏராளமானவர்கள் சென்னை அறிவாலயத்தில் குவிந்தனர். ஒரே, நேரத்தில் சென்னை தேனாம்பேட்டையில் தொண்டர்கள் குவிந்ததால் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. இதனால், உரிய நேரத்தில் மருத்துவமனைகளுக்கு ஆம்புலன்ஸ்கள் செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பொதுமக்களுக்கு கடும் நெருக்கடி கொடுத்து தான் முதல்வர் தனது பிறந்த நாளை கொண்டாட வேண்டுமா என்பது பலரின் கேள்வியாக உள்ளது?.

Image

Share it if you like it