நிருபர் எழுப்பிய கேள்வி: பதில் தெரியாமல் தவித்த அமைச்சர்கள்!

நிருபர் எழுப்பிய கேள்வி: பதில் தெரியாமல் தவித்த அமைச்சர்கள்!

Share it if you like it

பத்தாம் வகுப்பு தேர்வு தொடர்பாக அமைச்சர் உதயநிதியிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பி இருக்கின்றனர். இதற்கு, பதில் தெரியாமல் அவர் விழித்த சம்பவம்தான் பொதுமக்களிடையே பலத்த சிரிப்பலையை ஏற்படுத்தி இருக்கிறது.

தி.மு.க. இளைஞரணி செயலாளர் மற்றும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுதுறை அமைச்சராக இருப்பவர் உதயநிதி ஸ்டாலின். இவர், அமைச்சராக பொறுப்பு ஏற்றுக் கொண்ட பின்பு பத்திரிகையாளர்களை சந்திக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டு இருக்கிறது. இதையடுத்து, அவர்களை சந்தித்து வருகிறார். அந்தவகையில், அவர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு முறையாக பதில் அளிக்காமல் இன்று வரை திணறி வருகிறார்.

இப்படிப்பட்ட சூழலில் தான், உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடியுடன் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அண்மையில் பத்திரிகையாளர்களை சந்தித்து இருக்கிறார். அப்போது, பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழக அரசு நுழைவு தேர்வு நடத்தியது குறித்த கேள்வியினை நிருபர் ஒருவர் உதயநிதியிடம் முன்வைத்து இருக்கிறார். இதற்கு, என்ன? பதில் சொல்வது என்று தெரியாமல் அவர் திருதிருவென விழித்து இருக்கிறார்.

இதையடுத்து, அமைச்சர் பொன்முடியை உதயநிதி நோக்கினார். அவரும், இதற்கு பதில் தெரியாமல் விழித்து இருக்கிறார்.


Share it if you like it