முகமது நபி பற்றி பேசினால்… அமைச்சர் கடும் எச்சரிக்கை!

முகமது நபி பற்றி பேசினால்… அமைச்சர் கடும் எச்சரிக்கை!

Share it if you like it

நபிகள் நாயகம் பற்றி இனி யாராவது வாய் திறந்தால் திராவிட முன்னேற்ற கழகம் சும்மா இருக்காது என அமைச்சர் ஆவேசம்.

தமிழகத்தில் ஹிந்து கடவுள்களை அவமதிப்பது தொடர்கதையாக இருந்து வருகிறது. குறிப்பாக, திராவிடர் கழகத்தினர் கருப்பர் கூட்டம் என்றொரு அமைப்பை வைத்துக் கொண்டு, ஹிந்துக் கடவுள்களை நிந்திப்பதை வழக்கமாக வைத்திருக்கின்றனர். இதற்கு, கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள், தி.மு.க. உள்ளிட்ட கட்சியினரும் ஆதரவாக இருந்து வருகின்றனர். கருப்பர் கூட்டத்தைச் சேர்ந்த சுரேந்திரன் என்பவன், 2020-ம் ஆண்டு முருகனின் வேலையும், கந்தசஷ்டி கவசத்தையும் இழிவுபடுத்தி பேசியிருந்தான்.

DMK minister felicitates YouTuber who derogated Hindu gods
ஹிந்துக்கள் கொதிப்பில் இருந்த சமயத்தில் மைனர் விஜய்யை நேரில் அழைத்து மேடையில் பாராட்டிய அமைச்சர் மா.சுப்பிரமணியன்.

இதையடுத்து, யூ2புரூட்டஸ் என்கிற பெயரில் சமூக வலைத்தளங்களில் வலம் வரும் மைனர் விஜய் என்பவன், சிதம்பரம் நடராஜர் பெருமான் நடனமாடுவது குறித்து மிகவும் கீழ்த்தரமாக விமர்சித்து வீடியோ வெளியிட்டிருந்தான். இது ஹிந்துக்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருந்தது. இதையடுத்து, மேற்படி யூடியூப்பர் மீது ஹிந்து அமைப்புகள் சார்பில் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டு இருக்கிறது. விடியல் ஆட்சி என்பதால் வழக்கம் போல தி.மு.க அரசு கப்சிப்.

Image
திமுகவில் இருக்கும் இந்துக்களே, கிறிஸ்தவர்களே எதிர்காலத்தில் இதுதான் நடக்கும்,

இதனை தொடர்ந்து, ஹிந்து தெய்வங்களை இழிவுபடுத்தும் விதமாக கடந்த மே 29-ம் தேதி செஞ்சட்டை பேரணி நடந்தது. இப்பேரணியில், மதுரை நாடாளுமன்றத் தொகுதி எம்.பி. வெங்கடேசன் தலைமையில் கம்யூனிஸ்ட் கட்சியினர், திராவிடர் கழகம், திராவிடர் விடுதலைக் கழகம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆகிய அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். இதில், பங்கேற்றவர்கள் ஹிந்து கடவுள்களை இழிவுபடுத்தி கோஷமிட்ட சம்பவம் ஹிந்துக்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது.

இந்த நிலையில் தான், பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் பொய்யா மொழி மகேஷ் இஸ்லாமியர்கள் ஏற்பாடு செய்து இருந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசியதாவது;

கருத்து சுதந்திரம் என்ற பெயரில் எப்படிப்பட்ட கருத்துக்கள் எல்லாம் ஒன்றியத்தை ஆண்டு கொண்டு இருக்கின்ற கட்சியை சேர்ந்தவர்கள் பேசி வருகின்றனர். எனது திருச்சி தெற்கு மாவட்டம் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி என்று தமிழ்நாடு முழுவதும் பெருமையோடு சொல்லி கொள்கிறோம். எனது திருச்சி தெற்கு மாவட்டத்தில் அன்பில் பொய்யா மொழி மகேஷ் திருவெறும்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர். இனிக்கோ இருதயராஜ் கிழக்கு சட்டமன்ற உறுப்பினர். அப்துல் சமத் மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர். இதுதான், எங்கள் நாடு இதுதான் திருச்சி தெற்குமாவட்டம்.

நபிகள் பற்றி இனி யாராவது வாய் திறந்தால் இந்த கூட்டம் மட்டுமில்லை ஒட்டு மொத்த இந்தியாவே உங்களுக்கு எதிராக ஒன்று கூடும். இன்றைக்கு, திருச்சி மாவட்டத்தை சேர்ந்த நாங்கள் மட்டுமல்ல திராவிட இயக்கம் மட்டுமல்ல மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி என நாங்கள் அனைவரும் சேர்ந்து உங்களுக்கு எச்சரிக்கை மணி அடிக்கும் கூட்டமாக இதை நாங்கள் பார்க்கின்றோம். என குறிப்பிட்டுள்ளார்.

ஹிந்துக்களின் உணர்வுகளை தி.மு.க ஆட்சியில் எவ்வளவு வேண்டுமானாலும் காயப்படுத்தி கொள்ளுங்கள். அதுகுறித்து எங்களுக்கு கவலையில்லை. தயவு செய்து உங்கள் ஓட்டு தி.மு.க.விற்கு மட்டுமே இருக்க வேண்டும் என்பது போல அமைச்சரின் பேச்சு இருப்பதாக பொதுமக்கள் உட்பட நெட்டிசன்கள் வரை தங்களது வேதனையை பகிர்ந்து வருகின்றனர்.


Share it if you like it