‘ரஞ்சிதமே’ பாடல்:   புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அசத்தல் நடனம்!

‘ரஞ்சிதமே’ பாடல்: புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அசத்தல் நடனம்!

Share it if you like it

வேங்கை வயல் விவகாரம் பூதாகாரமாக மாறியுள்ளது. இப்படிப்பட்ட சூழலில், புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் நடனமாடிய காணொளி வைரலாகி வருகிறது.

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயல் கிராமத்தில் பட்டியல் சமூகத்தை சேர்ந்தவர்கள் அதிகம் வசித்து வருகின்றனர். இந்நிலையில், அவ்வூர் மக்கள் பயன்படுத்தி வரும் குடிநீர் தொட்டியில் சமூக விரோதிகள் மனித கழிவை கலந்துள்ளனர். இச்சம்பவம், தமிழகத்தையும் தாண்டி இந்தியா முழுவதும் பேசுப்பொருளாக மாறியுள்ளது.

இந்த, கொடூர செயலை செய்தவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும் என பா.ஜ.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றன. எனினும், விடியல் அரசு அதன் மீது எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று சொல்லப்படுகிறது.

இப்படிப்பட்ட சூழலில், வேங்கைவயல் கிராமத்தை சேர்ந்த மக்கள் குற்றவாளிகளை கைது கோரி போராட்டம் நடத்தி இருக்கின்றனர். இந்த நிலையில்தான், புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு ‘ரஞ்சிதமே’ பாடலுக்கு நடனமாடிய காணொளி ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.


Share it if you like it