காவல் நிலையத்தில் கழக கண்மணிகள் கதகளி!

காவல் நிலையத்தில் கழக கண்மணிகள் கதகளி!

Share it if you like it

திருச்சி காவல் நிலையத்தில் தி.மு.க. ஆதரவாளர்கள் தாக்கி கொண்ட காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

தி.மு.க. அமைச்சர் கே.என். நேரு மற்றும் திருச்சி சிவா எம்.பி. ஆதரவாளர்கள் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து, இந்த விவகாரம் திருச்சி காவல் நிலையத்திற்கு சென்றது. அப்போது, இரு தரப்பின் ஆதரவாளர்களும் காவல் நிலையத்திற்குள்ளேயே கடுமையாக மோதிக் கொண்டனர்.

இதனை தொடர்ந்து, அமைச்சர் கே.என். நேருவின் ஆதரவாளரான தி.மு.க. பகுதி செயலாளர் திருப்பதி என்பவரை போலீசார் கைது செய்தனர். இந்த காணொளி தான் தற்போது வைரலாகி வருகிறது.


Share it if you like it