காட்பாடியாரை காண்டாக்கிய மின்பொறியாளர்!

காட்பாடியாரை காண்டாக்கிய மின்பொறியாளர்!

Share it if you like it

அமைச்சர் துரைமுருகன் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் மின்தடை ஏற்பட்டது. இதானல், கோவமடைந்த அமைச்சர் மின்பொறியாளரை கண்டித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தி.மு.க.வில் ஒரு கோடி உறுப்பினர்களை சேர்க்கும் நிகழ்ச்சி ஊட்டியில் உள்ள ஏ.டி.சி.யில் நடைபெற்றது. இதில், சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சுற்றுலாத்துறை அமைச்சர் ராமசந்திரன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில், சிறப்பு அழைப்பாளராக தி.மு.க. பொதுச்செயலாளரும் நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் கலந்து கொண்டார். நிகழ்ச்சி துவங்கிய பின்பு அமைச்சர் துரைமுருகன் பேசிகொண்டிருந்தார். அப்போது, திடீரென மின்தடை ஏற்பட்டது. இதையடுத்து, ஜெனரேட்டர் கொண்டு வரப்பட்டு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிலையில், ஊட்டி மின்பொறியாளர் சந்தீப்பை அமைச்சர் துரைமுருகன் செல்போன் வாயிலாக தொடர்பு கொண்டார். அப்போது, மூன்று அமைச்சர்கள் பங்கு பெற்ற நிகழ்ச்சியில் மின்தடை ஏற்படலாமா? என கேள்வி எழுப்பினார். எங்கு, மின்தடை ஏற்பட்டது என சந்தீப் கேள்வி எழுப்பி இருக்கிறார். இதனால், காண்டான காட்பாடியார் மின் இணைப்பை உடனே சரி செய்ய வேண்டும். நாளை வந்து தம்மை பார்க்க வேண்டும் என போனை கட் செய்துள்ளார்.

10 நிமிடம் அணில் ஓடியதற்கே இவ்வளவு கோவம் என்றால், சாதாரண பொதுமக்களுக்கு எவ்வளவு கோவம் வரும் என பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


Share it if you like it