பஸ் ஓட்டிய தி.மு.க. எம்.எல்.ஏ… அலறியடித்த பயணிகள்!

பஸ் ஓட்டிய தி.மு.க. எம்.எல்.ஏ… அலறியடித்த பயணிகள்!

Share it if you like it

தி.மு.க. எம்.எல்.ஏ. அரசு பேருந்தை ஓட்ட தெரியாமல் ஓட்டி கால்வாயில் இறக்கிய சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் அடுத்த கீழ்கதிர்பூர் நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில், தி.மு.க. மூத்த தலைவரும் காஞ்சிபுரம் எம்.எல்.ஏ.வுமான சி.வி.எம்.பி.எழிலரசன் கலந்து கொண்டார். அந்த வகையில், அப்பகுதி மக்களுக்கு போக்குவரத்து வசதியை ஏற்படுத்தும் வகையில் நேற்று அரசு பஸ் இயக்கப்பட்டது. பஸ்ஸில், கட்சி நிர்வாகிகள் மற்றும் பயணியர் இருந்தனர்.

இதையடுத்து, தி.மு.க. எம்.எல்.ஏ. பஸ்ஸை ஓட்ட துவங்கியுள்ளார். பஸ் குறுகிய வழியில் சென்றபோது அருகில் உள்ள கால்வாயின் பள்ளத்தில் பஸ்ஸின் பின் சக்கரம் சிக்கியது. இதில், பள்ளம் அருகில் இருந்த மின் கம்பம் பஸ் மீது சாய்ந்தது. இதனால், கடும் அதிர்ச்சியடைந்த பயணிரும், ரூ. 200 உடன்பிறப்புகளும் பஸ்சில் இருந்து ஓட்டம் எடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it