தி.மு.க. மூத்த தலைவர் மற்றும் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் பூண்டி கலைவாணன். இவர், கருணாநிதி காலத்தில் இருந்தே அக்கட்சியில் இருப்பவர். இந்நிலையில், திருவாரூர் மாவட்டத்தில் இளைஞர்நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது, அக்கட்சியை சேர்ந்த தொண்டர்கள், நிர்வாகிகள் என ஏராளமானவர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
அந்த வகையில், தி.மு.க. மூத்த தலைவர் பூண்டி கலைவாணன் அமைச்சர் உதயநிதிக்கு சாரட் வண்டி ஓட்டி இருக்கிறார். நேற்று கட்சிக்கு வந்து இன்று அமைச்சரான உதயநிதிக்கு மூத்த தலைவர் சாரட் வண்டி ஓட்டியதுதான் கொடுமையிலும் கொடுமை என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
சிலர், அடிமையின் உடம்பில் ரத்தம் எதற்கு என கருத்து தெரிவித்துள்ளனர்.