கழிவு நீர் மற்றும் சாக்கடை தொட்டிகளை அகற்றுவதில் ஏற்படும் உயிர் இழப்புகளில் தமிழகம் முதலிடத்தில் இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
சாக்கடை மற்றும் கழிவுநீர் தொட்டிகளை சுத்தம் செய்யும் போது உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் தமிழகம் முதலிடத்தில் இருக்கும் அதிர்ச்சி தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது. தமிழகத்தில் – 52, உ.பி.யில்-46, ஹரியானா-40, மகாராஷ்டிரா-38, டெல்லி -33, குஜராத்-23, கர்நாடகா-23, ஆந்திரா-12, பஞ்சாப்-7, தெலுங்கானாவில்-7 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவிலேயே முன்னேறிய மாநிலம், சமூக நீதி, கல்வியறிவு பெற்ற மாநிலம் என்று கூறிவரும் திராவிட ஆட்சியில்தான் இந்த அவலம் நிகழ்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.