காங்கிரஸ்காரர்களை வளைத்து வளைத்து கைது செய்யும் தி.மு.க.!

காங்கிரஸ்காரர்களை வளைத்து வளைத்து கைது செய்யும் தி.மு.க.!

Share it if you like it

காங்கிரஸ் பிரமுகரை தமிழக காவல்துறை கைது செய்து வீட்டு சிறையில் வைத்துள்ளது. இச்சம்பவம், காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

பல்வேறு நலத்திட்டங்களை துவங்கி வைக்கும் விதமாக, பாரதப் பிரதமர் மோடி இன்று சென்னை வருகிறார். இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் பிரதமருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வண்ணம் ஆங்காங்கே ஆர்ப்பாட்டம், போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் எஸ்.சி., எஸ்.டி., பிரிவு மாநிலத் தலைவராக இருப்பவர் ரஞ்சன் குமார். இவர், பிரதமருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், 320 கருப்பு பலூன்களை தனது வீட்டில் பதுக்கி வைத்து இருந்தார். தமிழக காவல்துறைக்கு கிடைத்த ரகசிய தகவல் அடிப்படையில் ரஞ்சன் குமார் வீட்டில் சோதனை நடத்தி கருப்பு பலூன்களை தமிழக போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

மேலும், அவர் வீட்டை விட்டு வெளியே செல்லாத வகையில் போலீசார் அவரை வீட்டு சிறையில் வைத்துள்ளனர். பிரதமருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் காங்கிரஸ்காரர்களை தி.மு.க. அரசு வளைத்து வளைத்து கைது செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it