திடீரென போராட்டத்தை வாபஸ் பெற்ற உதயநிதி: காரணம் என்ன?

திடீரென போராட்டத்தை வாபஸ் பெற்ற உதயநிதி: காரணம் என்ன?

Share it if you like it

மத்திய அரசுக்கு எதிராக போராட்டத்தை உதயநிதி அறிவித்திருந்த நிலையில் திடீரென வாபஸ் பெற்று இருப்பதை நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.

தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை. இவர், கடந்த ஏப்-14- ஆம் தேதி தமிழக முதல்வர் ஸ்டாலின், மருமகன் சபரீசன், மகன் உதயநிதி ஸ்டாலின், தி.மு.க. அமைச்சர்கள் மற்றும்எம்.பி.க்களின் சொத்து பட்டியலை வெளியிட்டார். தி.மு.க.வின் சொத்து பட்டியல் நாட்டையே உலுக்கி இருக்கிறது. இதனை தொடர்ந்து, இச்சம்பவம் பொதுமக்கள் மத்தியில் தற்போது பேசுப்பொருளாக மாறியிருக்கிறது.

இந்த நிலையில் தான், எதிர்வரும் ஏப்ரல் 17- ஆம் தேதி சென்னை சாஸ்திரி பவன் முன் மத்திய அரசுக்கு எதிராக தி.மு.க. இளைஞர், மாணவர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் தி.மு.க. அறிவித்து இருந்தது. இப்படிப்பட்ட சூழலில் தான், தி.மு.க. இளைஞர் அணி செயலாளரும் விளையாட்டுதுறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் ஆர்ப்பாட்டம் ரத்து செய்யப்படுவதாக திடீரென அறிவித்துள்ளார்.


Share it if you like it