தமிழக எம்.பி.களுக்கு வேற வேலையே இல்லையா?

தமிழக எம்.பி.களுக்கு வேற வேலையே இல்லையா?

Share it if you like it

தனது ரசிகையின் ஆசையை நடிகர் விஜய் நிறைவேற்ற வேண்டும் என தி.மு.க. எம்.பி. செந்தில் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இதற்கு, நெட்டிசன்கள் அவரை கடுமையாக சாடி வருகின்றனர்.

தி.மு.க.வை சேர்ந்தவரும் தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பவர் செந்தில். இவர், பா.ஜ.க. ஆளும் மாநிலங்கள் மற்றும் பா.ஜ.க.வை விமர்சனம் செய்வதை தனது கடமையாக கொண்டவர். காலையில் தொடங்கி மாலை வரை ட்விட்டரில் குடும்பம் நடத்தி வருகிறார் என்ற குற்றச்சாட்டு இவர் மீது உண்டு. அதனை மெய்ப்பிக்கும் வகையில், இவரது செயல்பாடுகள் தொடர்ந்த வண்ணம்.

இப்படிப்பட்ட சூழலில், தர்மபுரி எம்.பி.யின் ட்விட்டர் பதிவு ஒன்று பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. அதன் சாராம்சம் இதுதான்; அதாவது, நடிகர் விஜய்யின் ரசிகை ஒருவர் அவரது வீட்டின் முன்பாக உள்ள சி.சி.டிவியில் விஜய்க்கு உருக்கமான கோரிக்கை விடுத்துள்ளார். இந்த காணொளியை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு தி.மு.க. எம்.பி. நடிகர் விஜய்யிடம் கோரிக்கை விடுத்திருக்கிறார்.

நீ நன்றாக படித்து மிகப்பெரிய இடத்திற்கு வந்தால், நடிகர் விஜய் உன்னை தேடி வந்து பார்ப்பார். நீ படிப்பில் கவனம் செலுத்து என்று அந்த ரசிகைக்கு தர்மபுரி எம்.பி. அறிவுரை வழங்கி இருக்க வேண்டும். அதை விடுத்து, நடிகர் விஜய்க்கு தி.மு.க. எம்.பி. கோரிக்கை வைத்த சம்பவம் கடும் கண்டனத்திற்குரியது என்பது பலரின் கருத்தாக உள்ளது.

இதனிடையே, கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும் மதுரை எம்.பி.யுமாக இருப்பவர் வெங்கடேசன். இவர்தான், நடிகர் சூர்யா குடும்பத்திற்கு அண்மையில் கீழடியை சுற்றிக்காட்டும் வழிக்காட்டியாக இருந்தார். இப்படிப்பட்ட சூழலில் தான், நடிகர் விஜய்க்கு தி.மு.க. எம்.பி. கோரிக்கை விடுத்துள்ளார்.

இவர்களுக்கு, வேற வேலையே இல்லையா? என்பது நெட்டிசன்களின் கேள்வியாக உள்ளது.


Share it if you like it