அமைச்சர் செந்தில் பாலாஜி மாதம் 60 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்குவதாக டாஸ்மாக் ஊழியர் பேசிய காணொளி ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.
தமிழகத்தில், விடியல் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த ஆட்சியில், சட்டம் ஒழுங்கு சந்தி சிரித்து வருவதை அனைவரும் நன்கு அறிவர். அதேவேளையில், எங்கும் லஞ்சம் தலைவிரித்து ஆடி வருகிறது. இதன்காரணமாக, ஏழை எளியவர்கள் என அனைவரும் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி இருக்கின்றனர். இந்த ஆட்சியில், நடைபெறும் அவலங்களை கண்டிக்க வேண்டிய அ.தி.மு.க. வழக்கம் போல கப்சிப் என இருந்து வருகிறது.
இப்படிப்பட்ட சூழலில், டாஸ்மாக் ஊழியர் ஒருவர் பேசிய காணொளி பெரும் சர்ச்சையாக மாறியுள்ளது. அதாவது, அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு மாதம் 60,000 ரூபாய் லஞ்சம் தருகிறோம் என அந்த ஊழியர் பேசியிருக்கிறார். இந்த காணொளிதான் தற்போது வைரலாகி வருகிறது.