கெஞ்சிய ஆர்.எஸ்.பாரதி… பதிலடி தந்த அண்ணாமலை!

கெஞ்சிய ஆர்.எஸ்.பாரதி… பதிலடி தந்த அண்ணாமலை!

Share it if you like it

வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பிய ஆர்.எஸ். பாரதிக்கு தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தக்க பதிலடியை கொடுத்துள்ளார்.

தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை. இவர், கடந்த ஏப்ரல்-14-ல் தி.மு.க.வின் சொத்துப்பட்டியலை வெளியிட்டார். இதில், தி.மு.க. குடும்பம், அமைச்சர்கள் மற்றும் எம்.பி.க்கள் சுமார் 1,34,31,70,00,00,00,000 சொத்து வைத்திருப்பதாக தெரிவித்திருந்தார். இதுதான், தமிழக மக்களிடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது. அண்ணாமலையின் பட்டியல் தி.மு.க. மேலிடத்தை கடும் உஷ்ணத்தில் ஆழ்த்தி இருக்கிறது. இதனை தொடர்ந்து, தமிழக தலைவர் ஒரு வாரத்திற்குள் மன்னிப்பு கேட்க வேண்டும். அதேவேளையில், 500 கோடி ரூபாய் நஷ்ட ஈடாக வழங்க வேண்டும். என, தி.மு.க. மேலிடம் வக்கீல் நோட்டீஸை அனுப்பி இருந்தது.

இந்த வக்கீல் நோட்டீஸ்க்கு தான் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தக்க பதிலடியை கொடுத்துள்ளார். அதாவது, மன்னிப்பும் கேட்க மாட்டேன். நஷ்ட ஈடும் அளிக்க மாட்டேன் என தெரிவித்துள்ளார்.


Share it if you like it