பயத்துடன் தன்னிலை விளக்கம் தந்த பி.டி.ஆர்: மிரட்டியதா மேலிடம்?

பயத்துடன் தன்னிலை விளக்கம் தந்த பி.டி.ஆர்: மிரட்டியதா மேலிடம்?

Share it if you like it

தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆரின் தன்னிலை விளக்கத்தை நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.

தி.மு.க. மூத்த தலைவர் மற்றும் நிதியமைச்சராக இருப்பவர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன். இவரது, ஆடியோ அண்மையில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. அந்த ஆடியோவில், உதயநிதி ஸ்டாலின், சபரீசன் உள்ளிட்டவர்கள் கடந்த ஒரு வருடத்தில் ரூ.30,000 ஆயிரம் கோடி சேர்த்துள்ளனர் என்று தெரிவித்து இருந்தார். அமைச்சரின், இந்த பேச்சு நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது.

இப்படிப்பட்ட சூழலில், நிதியமைச்சர் தன்னிலை விளக்கம் கொடுத்துள்ளார். அதில், அந்த குரல் பதிவு தன்னுடையது அல்ல. அது போலியான ஆடியோ என்று கூறியுள்ளார். போலியான ஆடியோ என்று கூறிய அமைச்சர் ஏன்? காவல்துறையில் புகார் தெரிவிப்பேன் என்று கூறவில்லை.

தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க தயங்கமாட்டேன் என்று ஏன்? அமைச்சர் சொல்லவில்லை. நிதியமைச்சரின் உடல்மொழியை பார்க்கும் போது, தி.மு.க. மேலிடம் கடும் நெருக்கடியை கொடுத்திருக்கிறது. அதன் காரணமாகவே, பி.டி.ஆர். பயத்துடன் பேசியிருக்கிறார் என மக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


Share it if you like it