ஓ… இதுதான் பகுத்தறிவா?

ஓ… இதுதான் பகுத்தறிவா?

Share it if you like it

தி.மு.க.வை சேர்ந்த நிர்வாகி ஒருவர் மண்சோறு சாப்பிடுவது போன்ற புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் மற்றும் தமிழக முதல்வராக இருப்பவர் மு.க. ஸ்டாலின். இவர், பகுத்தறிவு, சுயமரியாதை, மூடநம்பிக்கை ஒழிப்பு என மேடைகள் தோறும் பேசக் கூடியவர். ஆனால், இவரது கருத்துக்களை அக்கட்சியை சேர்ந்த மூத்த தலைவர்களோ, தொண்டர்களோ கடைப்பிடிப்பார்களா? என்பது மில்லியன் டாலர் கேள்வி.

இந்த நிலையில் தான், தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு திடீரென கொரோனா தொற்று ஏற்பட்டது. இதையடுத்து, அவர் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார். அந்த வகையில், முதல்வர் ஸ்டாலின் பூரண குணம் அடைய வேண்டி ம.தி.மு.க தலைவர் வைகோ வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

இதனிடையே, பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, தமிழக முதல்வர் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது என்ற செய்தியை அறிந்தேன். அவர் பூரண குணமடைந்து மக்கள் சேவைக்கு விரைந்து வர இறைவனை வேண்டிக்கொள்கிறேன் என தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்து இருந்தார். இதனை தொடர்ந்து, பாரதப் பிரதமர் மோடி தொலைபேசி வாயிலாக முதல்வரை தொடர்பு கொண்டு நலம் விசாரித்தார்.

இப்படிப்பட்ட சூழலில் தான், தி.மு.க.வை சேர்ந்த நிர்வாகி ஒருவர் மண்சோறு சாப்பிடுவது போன்ற புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சுயமரியாதை கட்சி தற்பொழுது சோற்றை தூர்வாறும் கட்சியாக மாறி விட்டது என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


Share it if you like it